திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

புத்திசாலி மனிதன்

​மாலை நேரம் காட்டு வழியேமனிதன் ஒருவன் வந்தான்பசி தீர்க்கும் பழம் தேடி

News image
Updated On :26 ஜூன் 2021, 12:30 am


மாலை நேரம் காட்டு வழியே
மனிதன் ஒருவன் வந்தான்
பசி தீர்க்கும் பழம் தேடி
அங்கும் இங்கும் அலைந்தான்

உச்சிக் கிளையில் பழுத்தப் பழங்கள்
வாவா என்று அழைத்தன
கிளைகளில் தாவும் குரங்குகள் அவனைப்
பார்த்துப் பார்த்துச் சிரித்தன

கனிந்த பழங்கள் மர உச்சியிலே
பறிக்க அவனால் முடியவில்லை
புத்திசாலி மனிதன் மனதில் நல்ல 
உபாயம் ஒன்று எட்டியது

சிறுகற்கள் தேடி எடுத்து வந்தான்
குரங்குகள் நோக்கி எறிந்தான்
கோபம் கொண்ட குரங்குகள் பழங்களை
எடுத்தெறிந்தது அவன் மீது

எறிந்த பழத்தை எடுத்த மனிதன்
புசித்தான் தன் பசிதீர
களைப்பு நீங்கி அந்த மனிதன் 
நடந்தான் தன் வழிமேலே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.