எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

புத்திசாலி மனிதன்

​மாலை நேரம் காட்டு வழியேமனிதன் ஒருவன் வந்தான்பசி தீர்க்கும் பழம் தேடி

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:29 am

எஸ். சுவாமிநாதன்


மாலை நேரம் காட்டு வழியே
மனிதன் ஒருவன் வந்தான்
பசி தீர்க்கும் பழம் தேடி
அங்கும் இங்கும் அலைந்தான்

உச்சிக் கிளையில் பழுத்தப் பழங்கள்
வாவா என்று அழைத்தன
கிளைகளில் தாவும் குரங்குகள் அவனைப்
பார்த்துப் பார்த்துச் சிரித்தன

கனிந்த பழங்கள் மர உச்சியிலே
பறிக்க அவனால் முடியவில்லை
புத்திசாலி மனிதன் மனதில் நல்ல 
உபாயம் ஒன்று எட்டியது

சிறுகற்கள் தேடி எடுத்து வந்தான்
குரங்குகள் நோக்கி எறிந்தான்
கோபம் கொண்ட குரங்குகள் பழங்களை
எடுத்தெறிந்தது அவன் மீது

எறிந்த பழத்தை எடுத்த மனிதன்
புசித்தான் தன் பசிதீர
களைப்பு நீங்கி அந்த மனிதன் 
நடந்தான் தன் வழிமேலே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.