/

அங்கிள் ஆன்டெனா

தபால் பெட்டிகள் ஏன் பெரும்பாலும் சிவப்பு நிறத் திலேயே அமைக்கப்பட்டுள்ளன?

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:10 pm

ரொசிட்டா

கேள்வி: தபால் பெட்டிகள் ஏன் பெரும்பாலும் சிவப்பு நிறத் திலேயே அமைக்கப்பட்டுள்ளன?

பதில்: பொதுவாக நமது நாட்டில் தபால் பெட்டிகள் சிவப்பு நிறத்தில் இருப்பதற்குக் காரணம், சுதந்திரத்துக்கு முன்னர் நம்மை ஆண்டு வந்த ஆங்கிலேயர்கள்தான்.

19--ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் வரை தபால் பெட்டிகள் இங்கிலாந்தில் பச்சை நிறத்தில்தான் இருந்தன. பின்னர் சிவப்பு நிறத்துக்கு மாறின. இதற்குக் காரணம் சிவப்பு நிறம் எளிதில் அனைவரையும் கவனத்தையும் கவர்ந்து விடுவதுதான்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்த காலத்தில்தான் நவீன தபால்துறையும் இந்தியாவுக்கு வந்தது. அவர்கள்தான் தங்களது நாட்டில் உள்ளது போலவே இங்கேயும் தபால்பெட்டிகளுக்கு சிவப்பு நிறம் பூசினர். அவர்கள் ஆதிக்கம் செலுத்திய நாடுகளில் எல்லாம் தபால் பெட்டிகள் சிவப்பு நிறத்தில் அமைக்கப்பட்டன.

ஆனால் இப்போது பல நாடுகளில் சிவப்பு, வெள்ளை, நீலம் ஆகிய நிறங்களில் தபால் பெட்டிகள் காணப்படுகின்றன. அமெரிக்காவில் தபால் பெட்டிகள் நீல நிறத்தில்தான் இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.