டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

அதிக ஆசை!

உணவகம் ஒன்றில் இருந்த பலகையில், ""இங்கு நீங்கள் எதை வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுங்கள்!....

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:58 pm

எம். அசோக்ராஜா

உணவகம் ஒன்றில் இருந்த பலகையில், ""இங்கு நீங்கள் எதை வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுங்கள்!.... அதற்கான தொகையை உங்கள் கொள்ளுப் பேரனிடமிருந்து நாங்கள் பெற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம்!'' என்று எழுதியிருந்தது. 

அதை யாரும் பொருட்படுத்தவில்லை. அவரவர்கள் சாப்பிட்டுவிட்டு, புன்னகையுடன்  பணத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றார்கள். ராமு அந்த உணவகத்திற்குள் நுழைந்தான். பலகையில் எழுதியிருந்ததைப் பார்த்தான். அவனுக்கு சந்தோஷமாகிவிட்டது. கொள்ளுப் பேரனிடம்தானே வாங்கிக் கொள்ளப் போகிறார்கள்.... என்று எண்ணி வேண்டும் வரை வயிறு முட்ட சாப்பிட்டான். 

சேவகரோ அவனிடம் தொகை எழுதிய சீட்டை நீட்டினார். 

ராமு அவரை விநோதமாகப் பார்த்தவாறு, ""என்ன இது?.... அங்கே அறிவிப்புப் பலகையில், சாப்பிட்டதற்கான தொகையை கொள்ளுப் பேரனிடம் வாங்கிக் கொள்வதாக  எழுதிவிட்டு இப்போ பணம் கேக்கறீங்களே? '' என்றான்.

சேவகர் பொறுமையாக, ""இது நீங்கள் சாப்பிட்டதற்கு அல்ல!....உங்கள் கொள்ளுத் தாத்தா சாப்பிட்டதற்கான தொகை!''

ராமு வேறுவழியில்லாமல், வாயடைத்தவாறு பணத்தைச் செலுத்திவிட்டுச் சென்றான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.