மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

பாப்பா நடத்தும் பாடம்!

குரங்கு புலி, கரடியெல்லாம் அமைதியாகவேகூடியிருந்து பாடம் கேட்குது எங்கள் வீட்டிலே

News image
Updated On :31 அக்டோபர் 2020, 12:30 am

குரங்கு புலி, கரடியெல்லாம் 
அமைதியாகவே
கூடியிருந்து பாடம் கேட்குது
எங்கள் வீட்டிலே

உயரமான நாற்காலியில் 
டீச்சராகியே
உரத்த குரலில் பாடம் எங்கள் 
பாப்பா நடத்துறார்!

"அ'கரம் முதல் "ஒü' வரையில் 
எழுதிக் காட்டுறார்!
அதனைப் போலே "ஏ, பி,சி,டி' 
சொல்லிக் காட்டுறார்!

ஆட்டத்தோடு பாட்டுப் பாடிக் 
கதையும் சொல்லுறார்!
அமைதியாகக் கேட்கச் சொல்லி 
"உஸ்...உஸ்' என்கிறார்!

இடையிடையே சின்னத் திரையின் 
படத்தைக் காட்டியே 
எளிமையாக அதன் கதையும் 
எடுத்துச் சொல்கிறார்.

விடுகதைகள் போடுகிறார்
விடையும் தருகிறார்!
வேடிக்கையாய்க் குரல் எழுப்பி 
நடித்தும் காட்டுறார்!

கடுமையான கணக்குப் பாடம் 
எளிமையாகவே 
கற்றுக்கொள்ள விரல்கள் நீட்டிச் 
சொல்லிக் காட்டுறார்!

விடுமுறைதான்... ஆனபோதும் 
வெளியில் போகாமல் 
வீட்டில் இருந்து பாடம் சொல்லும் 
பாப்பா சமர்த்துதான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.