அங்கிள் ஆன்டென்னா
வீட்டு சமையலறையில் பயன்படுத்தப்படும் எவர்சில்வர் பாத்திரங்கள் எவ்வளவுதான் தண்ணீர் பட்டாலும் துரு பிடிப்பதில்லையே...? ஏன்?


கேள்வி: வீட்டு சமையலறையில் பயன்படுத்தப்படும் எவர்சில்வர் பாத்திரங்கள் எவ்வளவுதான் தண்ணீர் பட்டாலும் துரு பிடிப்பதில்லையே...? ஏன்?
பதில்: பெயரிலேயே இருக்கின்றது மர்மம்.
எவர் சில்வர்.... எப்போதும் சில்aவர்தான். இதற்கு ஒன்றுமே ஆகாது.
இதில் இரும்பு, குரோமியம், மாங்கனீஸ், சிலிகான், கார்பன், நிக்கல் போன்ற உலோகங்களின் கலவை. இந்தக் கலவை சுற்றுச்சூழலில் உள்ள ஈரப்பதம் எதையும் தன்னுள் வாங்கிக் கொள்ளாது. இந்த உலோகங்கள் காற்றில் உள்ள ஈரப்பதத்தைச் சந்திக்கும்போது துருவைச் சமாளிக்கும் ஆக்ûஸடுகளையும் ஹைட்ராக்ûஸடுகளையும் உருவாக்குகின்றன. இந்த அபூர்வ சக்தியை எவர்சில்வர் பாத்திரங்களுக்கு வழங்குவதில் குரோமியம் பெரும்பங்கு வகிக்கின்றது.
எவர்சில்வரின் பளபளப்பு மக்களைக் கவர்வதால் இதைப் பயன்படுத்தி ஏராளமான வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
சரி, இருந்தாலும் எங்கள் வீட்டிலுள்ள எவர்சில்வர் பாத்திரங்களில் சிலவற்றில் சிறிய சிறிய துரு படிந்து காணப்படுகின்றனவே, அதற்கு என்ன சொல்கிறீர்கள் என்று கேட்கிறீர்களா? இதற்கு நீங்கள் தயாரிப்பாளரைத்தான் குறைப்பட்டுக் கொள்ள வேண்டும். குரோமியத்தின் அளவு சற்றுக் குறைந்தாலும் இந்த நிலை ஏற்படும். ஆகவே, அம்மாவிடம் சொல்லி நல்ல பாத்திரங்களை வாங்கச் சொல்லுங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...