மனிதன்!
இங்கிலாந்தில் ஒரு செல்வந்தர், தம் வாழ்நாளில் எந்தெந்த ஆசிரியர்கள் எழுதிய புத்தகங்களை ஆர்வத்தோடு வாங்கிப் படித்தாரோ அந்த ஆசிரியர்களுக்கெல்லாம் ஆளுக்குப் பத்துப் பவுன் வீதம், தன் சொத்திலிருந்து எடுத்து


இங்கிலாந்தில் ஒரு செல்வந்தர், தம் வாழ்நாளில் எந்தெந்த ஆசிரியர்கள் எழுதிய புத்தகங்களை ஆர்வத்தோடு வாங்கிப் படித்தாரோ அந்த ஆசிரியர்களுக்கெல்லாம் ஆளுக்குப் பத்துப் பவுன் வீதம், தன் சொத்திலிருந்து எடுத்து அனுப்பும்படி தம்முடைய இறுதிக் காலத்தில் உயில் எழுதிவைத்துவிட்டுச் சென்றார்.
அந்தப் புத்தக ஆசிரியர்களுள் பெர்னார்ட்ஷாவும் ஒருவர். அவரிடம் மேற்படி, உயில்படி 10 பவுனைக் கொண்டுபோய் கொடுத்தபோது, அதைப் பெற்றுக் கொண்ட ஷா கூறினார் -
""இந்தப் பத்துப் பவுனை மிக்க மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். என்னுடைய கருத்துப்படி நான் பெரிய மனிதன்தான். இன்னொருவர் என்னைப் புகழ்வதை, நான் லட்சியம் செய்வதில்லைதான். எனினும் என்னுடைய புத்தகங்கலைப் படிக்கும் ஒவ்வொருவரும் தாங்கள் இறப்பதற்கு முன் இம்மாதிரி பத்துப் பவுன் தருவார்களானால் நன்றாக இருக்கும்!''
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...