தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சமையல் குறிப்புகள்...

ஓட்ஸை நெய்விட்டு வறுத்து மாவாக்கி புட்டு செய்தால், சுவையாக இருக்கும்.

News image
Updated On :21 பிப்ரவரி 2026, 10:37 pm

கே.நாகலட்சுமி

ஓட்ஸை நெய்விட்டு வறுத்து மாவாக்கி புட்டு செய்தால், சுவையாக இருக்கும்.

பச்சைப் பட்டாணியை வேகவிட்டு அரைத்து கோதுமை மாவில் கலந்து சப்பாத்தி செய்தால், 'க்ரீன் சப்பாத்தி'யானது சுவையாக இருக்கும்.

கோதுமை மாவு பாதி, ராகி மாவு பாதி கலந்து சப்பாத்தி செய்தால், உடலுக்கு நல்லது. பூரியும் செய்யலாம். சுவையாக இருக்கும்.

 மஞ்சள் பூசணியை வேகவிட்டு பிசைந்து சப்பாத்தி மாவில் கலந்து சாப்பாத்தி செய்தால் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.

பேபி உருளைக்கிழங்கில் பொரியல் செய்யும்போது, கூடவே பச்சைப்பட்டாணியைச் சேர்த்து பொரியல் செய்தால் ரொம்பவே சுவையாக இருக்கும்.

கமலா ஆரஞ்சுத் தோலை வேஸ்ட் செய்யாமல் துவையல், குழம்பு செய்து சாப்பிடலாம்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேகவிட்டு மசித்து வெல்லம், ஏலப்பொடியைச் சேர்த்து பூரணமாக்கி போளி செய்தால், சுவையாக இருக்கும்.

முருங்கைக் கீரை, சின்னவெங்காயம் சேர்த்து கலந்து அடை,தோசை செய்தால், சுவை அருமையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.