மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆம்புலன்ஸ் ஓட்டும் பெண்..

'அதிவேகமாக வாகனத்தை இயக்கும்போது, பயத்தைவிட வாகனத்தின் உள்ளே இருக்கும் நோயாளியின் உயிரைக் காப்பதே தலையாயக் கடமையாக உணர்ந்து வாகனத்தை இயக்குகிறேன்'' என்கிறார் 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர் விஜயா.

News image

ஆம்புலன்ஸ்

Updated On :8 பிப்ரவரி 2025, 6:31 pm

'அதிவேகமாக வாகனத்தை இயக்கும்போது, பயத்தைவிட வாகனத்தின் உள்ளே இருக்கும் நோயாளியின் உயிரைக் காப்பதே தலையாயக் கடமையாக உணர்ந்து வாகனத்தை இயக்குகிறேன்'' என்கிறார் 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர் விஜயா.

இந்தப் பணிக்குத் தேர்வாகியுள்ள தமிழகத்திலேயே இரண்டாவது பெண் ஓட்டுநர் இவர். திருநெல்வேலி மாவட்டத்துக்கு உள்பட்ட டி.ராமநாதபுரத்தைச் சேர்ந்த நடராஜன்- சமுத்திரக்கனி தம்பதியின் மகள் முப்பத்து நான்கு வயதான விஜயா. இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு உள்பட்ட தியாகதுருகத்தைச் சேர்ந்த கோவிந்தனுக்கும் 2008-இல் திருமணம் நடைபெற்றது. ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

கோவிந்தன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். விஜயா 108 ஆம்புலன்ஸில் ஓட்டுநராகப் பணியாற்றி, மனித உயிர்களைக் காக்கும் சேவையாற்றி வருகிறார்.

அவர் கூறியது:

'சிறுவயது முதலே எனக்கு ஓட்டுநர் பணியில் விருப்பம் உண்டு. எனது சகோதரருடன் சேர்ந்து மினிலாரி போன்ற சரக்கு வாகனங்களில் சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு சேமியா, கோதுமை உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு சென்று விநியோகம் செய்திருக்கிறேன்.

ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கான நேர்முகத் தேர்வில் முதல் முறை பங்கேற்றபோது, தேர்வாகவில்லை. இரண்டாவது முறை பங்கேற்று, பணிவாய்ப்பைப் பெற்றேன்.சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணி வழங்கப்பட்டுள்ளது.

இரவு, பகல் என சுழற்சி முறையில் மனித உயிர்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். அதிவேகமாக வாகனத்தை இயக்கும்போது, பயத்தைவிட வாகனத்தின் உள்ளே இருக்கும் நோயாளியின் உயிரைக் காப்பதே தலையாயக் கடமையாக உணர்ந்து வாகனத்தை இயக்குகிறேன்'' என்கிறார் விஜயா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.