டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சமையல் குறிப்புகள்...

பப்பாளி, நூல்கோல் போன்றவற்றைத் துருவி தாளித்தால் மிகவும் நன்றாக இருக்கும். இவற்றுடன் இஞ்சி, பச்சை மிளகாயை அரிந்து போட்டு சமைக்கலாம்.

News image
Updated On :13 டிசம்பர் 2025, 6:30 pm

ஆர். ஜெயலட்சுமி

பப்பாளி, நூல்கோல் போன்றவற்றைத் துருவி தாளித்தால் மிகவும் நன்றாக இருக்கும். இவற்றுடன் இஞ்சி, பச்சை மிளகாயை அரிந்து போட்டு சமைக்கலாம்.

உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, வாழைக்காய், பாகற்காய் ஆகியவற்றை சிப்ஸ் கட்டரில் சீவிவிட்டு மோரில் உப்பு போட்டு சேர்த்து, நன்றாகப் பிழிந்து காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுத்தால் மொறுமொறுவென்று இருக்கும்.

கறிவேப்பிலை வாங்கும்போது சிறிய இலைகளைக் கொண்டவைகளை வாங்கினால், மிகுந்த மணல் கொண்டதாகவும் இருக்கும். சீக்கிரமாக அறைபட்டு சுவையும் கூடுதலாகக் கிடைக்கும். நீண்ட இலைகளில் அவ்வளவாக மணல் இருக்காது.

பருப்புப் பாயசம், அரிசிப் பாயசம் போன்றவைத் தயாரிக்கும்போது, பருப்பு, அரிசி நன்றாக வெந்தவுடன் இனிப்பைச் சேர்க்க வேண்டும். அதற்கு முன்பே சேர்த்துவிட்டால் நன்றாக வேகாது. பால் பாயசத்தில் பச்சரிசி நன்றாக வேகும் முன்பே இனிப்பு சேர்த்தால் பாயசம் திரிந்துவிடும்.

இஞ்சியைத் தோல் நீக்கிட, அதை தண்ணீரில் மண் போகும் வரை கழுவி, அம்மிக்கல்லில் இரண்டு கைகளாலும் தேய்த்தாலே போதும். தோல் சுத்தமாக உரிந்துவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.