தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

புடவைகள் பலவிதம்...

பட்டு, பருத்திப் புடவைகளில் பல ரகங்கள் உண்டு. நவீன காலத்தில் லெஹங்கா போன்றவையும் அசத்துகின்றன.

News image
Updated On :30 ஆகஸ்ட் 2025, 6:30 pm

பட்டு, பருத்திப் புடவைகளில் பல ரகங்கள் உண்டு. நவீன காலத்தில் லெஹங்கா போன்றவையும் அசத்துகின்றன. மற்றொரு வகை மார்டன் ரகம் டூப்பியான் புடவைகள். பருத்தி, பட்டு, சணல், லினென் எனப் பலவற்றில் புடவைகள் வருகின்றன. அதுதவிர மாநிலத்துக்கு மாநிலம் நெசவுப் பாணிகள், வடிவமைப்பு, அலங்காரங்களை மாற்றி, ஜரிகை, எம்பிராய்டரியை இணைத்து அசத்துகின்றனர்.

இந்த வகையில் காஞ்சி பட்டு, பனாரஸ் பட்டு உள்ளிட்ட பல ரகமான புடவைகளும் பெண்களைக் கவருகின்றன. இருந்தாலும் பெண்களின் கண்களில் மறைந்திருக்கும் சில புடவைகளும் உண்டு. அவற்றில் சில:

சிகோ புடவை (ஆந்திரம், தெலங்கானா): பட்டும், பருத்தியும் சேர்த்து இணைத்து நெய்யும் இந்தப் பட்டுப் புடவையின் நேர்த்தியும் பருத்தியின் காற்றோட்டமும் பெண்களைக் கவரும். வெயில் காலத்திலும் உடுத்துவதற்கு உகந்தது.

கரட் புடவை (மேற்கு வங்கம்): தூய பட்டினால் வெள்ளை வண்ணம், சிவப்பு எல்லைகள் இதன் சிறப்புஅழகு. பாலிவுட் துர்கா பூஜை காட்சிகளில் இது நிச்சயம் இடம் பெற்றிருக்கும்.

மோலாக்கலாமூறு புடவை (கர்நாடகா): மயில்கள், கோபுரங்கள், பாரம்பரியத் தாவரங்கள் உள்ளிட்டவை நேர்த்தியுடன் வரையப்பட்டிருக்கும். துடிப்பான கைத்திறன் மிக்கவை. பார்ப்போரை கேட்க வைக்கும் புடவை.

கோட்டா டோரியா புடவை (ராஜஸ்தான்): 'காட்ஸ்' எனப்படும் சிறிய சதுர வடிவங்களால் நெய்யப் பட்டவை. லேசானது. குளிர்ச்சியானது. ஆனால், உறுதியானவை. கோடைக்காலத்துக்கு மிகவும் ஏற்றது.

துஸ்ஸார் கிச்சா புடவை (ஜார்கண்ட்): துஸ்ஸார் பட்டு நூலையும், அதன் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட கிச்சா நூலையும் சேர்த்து உருவாக்கப்படுவது. கரடுமுரடான அமைப்பையும் இயற்கையான பழமையான தோற்றத்தையும் கொண்டது. தங்க நிறத்தில் மென்மையான தன்மையுடனும் இறுக்காத தன்மை இல்லாமலும் இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.