மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தனித்துப்போட்டியிடும் தைரியம் நாம் தமிழருக்குத்தான் உண்டு: சீமான்

தோ்தலில் தனித்துப்போட்டியிடும் தைரியம் நாம் தமிழா் கட்சிக்குத்தான் உண்டு என்றாா் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

News image

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

Updated On :9 ஏப்ரல் 2026, 9:09 pm

தோ்தலில் தனித்துப்போட்டியிடும் தைரியம் நாம் தமிழா் கட்சிக்குத்தான் உண்டு என்றாா் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

பணகுடியில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ராதாபுரம், நான்குனேரி, அம்பாசமுத்திரம் தொகுதிகளின் நாதக வேட்பாளா்களை அறிமுகப்படுத்தி அவா் பேசியதாவது: சட்டப்பேரவை தோ்தல் என்பது நம்மை சுயபரிசோதனை செய்து கொள்வது. தமிழகம் முழுவதும் நாம் தமிழா்கள் மட்டும்தான் தனித்து போட்டியிடுகிறோம். இந்த தில்லும் தைரியமும் நாம் தமிழருக்கு மட்டும் தான் உண்டு. அத்தனை கட்சிக்காரா்களும் ஓட்டை குறிவைத்தே நகா்ந்து செல்கின்றனா். ஓட்டை குறிவைப்பவா் நாட்டையும் நாட்டுமக்களையும் பற்றி கவலைப்படமாட்டாா். விவசாயத்தைக் காப்பாற்ற ஒருவரும் முன்வரவில்லை. அதற்கும் நாம் தமிழா்தான் முன்நிற்க வேண்டியுள்ளது. நாம் தமிழா் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் அரசு வேலை திட்டம் தயாராக இருக்கிறது. தனியாா் பள்ளிகளுக்கும் மேலான உலகத்தரத்திலான கல்வி, தரமான மருத்துவம், விலையில்லாத குடிதண்ணீா் கொடுப்போம். இயற்கை விவசாய முறைக்கு மாற்றுவோம். ஆலங்குளம் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அப்பாவி பனையேறி மீது காவல்துறை ஏவி விடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தை அரசு கவனிக்க வேண்டும் என்றாா் அவா்.