தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சமையல் குறிப்புகள்...

ரைஸ் குக்கரில் வைத்த சாதம் குழைந்துவிட்டால் அதன் மேல் ஒரு ரொட்டியை வைத்து மேலும் இரண்டு நிமிடங்கள் சூடுபடுத்தினால், ரொட்டி அதிகப்படியான ஈரப் பதத்தை உறிஞ்சி, சாதத்தை பொலபொலவென்று ஆகிவிடும்.

News image
Updated On :25 நவம்பர் 2023, 6:30 pm


ரைஸ் குக்கரில் வைத்த சாதம் குழைந்துவிட்டால் அதன் மேல் ஒரு ரொட்டியை வைத்து மேலும் இரண்டு நிமிடங்கள் சூடுபடுத்தினால், ரொட்டி அதிகப்படியான ஈரப் பதத்தை உறிஞ்சி, சாதத்தை பொலபொலவென்று ஆகிவிடும்.

பொறித்த அப்பளம் காகிதம் போல் ஆகிவிட்டால், அதனை மீண்டும் சூடான எண்ணெயில் பொரித்து எடுக்க மொறுமொறு என நன்றாக இருக்கும்.

தட்டை செய்யும்போது கடலைப் பருப்புக்கு பதிலாக ஒரு டம்ளர் கொள்ளு பயிறை ஊற வைத்து அரைத்து தட்டை செய்தால் சுவையாக இருக்கும்.

வாழைக்காயை பயன்படுத்தியதும் அதன் தோலை வீணாக்காமல் வேக வைத்து துவையல் செய்து சாப்பிட்டால் வயிற்றுப்புண் அல்சர் போன்றவைக்கு நிவாரணம் கிடைக்கும்.

அடை செய்யும் போது பச்சரிசிக்கு பதிலாக  கோதுமை ரவையை போட்டு ஊறவைத்து செய்தால் தனி சுவையுடன் இருக்கும். உடலுக்கும் ஆரோக்கியமாக இருக்கும்.

-செளமியா சுப்ரமணியன்,
பல்லாவரம்.

சூப் செய்யும்போது ஒரு துண்டு வெங்காயம் சிறிது கடுகை நெய்யில் வறுத்து சேர்க்க, சூப் வாசனையுடன் இருக்கும்.

வெண்ணெய் காய்ச்சி இறக்கும்போது, அரை தேக்கரண்டி தயிர் சேர்த்தால் நெய் கமகமவென்று இருக்கும்.

உப்பு ஜாடியில் ஈரம் கசிந்தால், ஜாடிக்குள் சிறிது அரிசியை உப்புடன் கலந்து வைத்தால் ஈரக்கசிவு இருக்காது.

-கே.பிரபாவதி,
மேலகிருஷ்ணன்புதூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.