எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மகளிர் டிப்ஸ்

வாய்ப்புண் குணமாக, மணத்தக்காளி கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் போதும்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 6:54 pm

ஆர். ஜெயலட்சுமி

மருத்துவம்

வாய்ப்புண் குணமாக, மணத்தக்காளி கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் போதும்.
நெஞ்சு சளி கரையை அத்திப்பழத்தை காலை, மாலை சாப்பிட்ட வேண்டும்.
இருமலுக்கு மிளகை வறுத்து தேன் கலந்து சாப்பிட வேண்டும்.
சளித் தொல்லை இருந்தால், கொதிக்கும் நீரில் மஞ்சள் தூளைப் போட்டு ஆவி பிடிக்கவும்.
வயிற்றுப்புண்ணைத் தடுக்க சூடான உணவு, குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டும்.

சமையல்

மாவு பிசையும்போது, கோதுமை மாவுடன் சிறிது நேரம் வறுத்த ரவையை சேர்த்து பிசைந்தால் பூரி மொறுமொறுவென்று இருக்கும்.
வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் சேர்த்தால், கமகமவென்று இருக்கும்.
குருமா செய்யும்போது, சிறிது இஞ்சியையும், ஓமத்தையும் சேர்த்தால் சுவை கூடும். எளிதில் ஜூரணமாகும்.
சப்பாத்தி, பூரிக்கு மாவு பிசையும்போது சிறிது ஓமப்பொடி சேர்த்தால் எளிதில் ஜீரணமாகும்.

ஆர்.கே.லிங்கேசன்

ஆன்மிகம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகேயுள்ள ஆத்மநாதர் கோயிலில் சிவன் குருநாதராகத் தோன்றி, மாணிக்கவாசகருக்கு உபதேசித்தார். 
மதுரை மாவட்டம் திருவாதவூர் மறைநாதசுவாமி கோயில் மாணிக்கவாசகர் அவதரித்த தலம். 
தேனி மாவட்டம் சின்னமனூர் மாணிக்கவாசகர் கோயிலில்ல சிவன், அம்பிகை பரிவார மூர்த்திகளாக உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் சிவன் மாணிக்கவாசகருக்கு ஆகமங்களை உபதேசித்தார். 
சிதம்பரம் நடராஜர் கோயிலில் மாணிக்கவாசகர் சொல்ல, சிவ பெருமான் திருவாசகத்தை எழுதிய தலமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.