மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

பஞ்சாபி கட்லெட்

உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து உப்பு சேர்த்து நன்றாகப் பிசைய வேண்டும்.

News image
Updated On :3 ஜூன் 2023, 6:30 pm

தேவையானவை:

உருளைக்கிழங்கு- 400 கிராம்
பச்சை மிளகாய்- 6
கொத்தமல்லி இலை- 1 கட்டு
பிரட் தூள்- 200 கிராம்
பூரணம் செய்ய..: 
முந்திரிப் பருப்பு- 25 கிராம்
வேர்க்கடலை- 25 கிராம்
பிஸ்தா- 25 கிராம்
கிஸ்மிஸ்- 25 கிராம்
மிளகாய்ப் பொடி- 1 தேக்கரண்டி
சீரகப் பொடி- 1 தேக்கரண்டி
அக்ரூட் பருப்பு-6 
உப்பு, நல்லெண்ணெய்- தேவையான அளவு
தேங்காய்- அரை மூடி

செய்முறை: 

உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து உப்பு சேர்த்து நன்றாகப் பிசைய வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து, காய்ந்ததும் எல்லா பருப்பு வகைகளையும் நன்றாக வறுத்தெடுத்து தேங்காய்த் துருவலையும் சிவக்க வறுத்தெடுத்து இதனுடன் உப்பு,மிளகாய்த் தூள், சீரகப் பொடி கலந்து நன்றாகப் பிசைந்து பூரணம் தயாரிக்க வேண்டும். உருளைக்கிழங்குடன் பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, மிளகாய்ப் பொடி கலந்து பிசைய வேண்டும். இதை குட்டி குட்டி கிண்ணம் போலச் செய்து இதனுள் சிறிதளவு பூரணம் வைத்து ஓரங்களை மூடி கொட்டித் தாளில் புரட்டி நடுவே அக்ரூட் பருப்பை நட வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும் கட்லெட்டை போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.