ஆலு பாலக்தால்
உருளைக்கிழங்கைத் தோல் நீக்கி சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி வேக வைக்க வேண்டும். பசலைக்கீரையை நீரில் அலசி பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.


தேவையானவை:
உருளைக்கிழங்கு- 2
பசலைக்கீரை- 1 கட்டு
துவரம் பருப்பு- 50 கிராம்
சீரகம், நெய்- தலா 1 மேசைக்கரண்டி
இஞ்சி- பூண்டு விழுது- 2 மேசைக்கரண்டி
வெங்காயம்- 4
பச்சைமிளகாய்0- 5
தக்காளி- 2
மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள்- 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்- 1 தேக்கரண்டி
தனியா தூள்- 1 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்கைத் தோல் நீக்கி சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி வேக வைக்க வேண்டும். பசலைக்கீரையை நீரில் அலசி பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கித் தனியே வைக்க வேண்டும். பச்சை மிளகாயை நீள வாக்கில் இரண்டாகக் கீற வேண்டும். வாணலியில் நெய்விட்டு அடுப்பில் வைத்துகாய்ந்ததும் சீரகத்தைத் தாளித்து இஞ்சி- பூண்டு விழுது, பச்சை மிளகாய், வெங்காயத்தை ஒன்றன்பின் ஒன்றாகப் போட்டு வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் பசலைக் கீரையையும் தக்காளியையும் போட்டு வதக்கி மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள், தனியா தூள்களுடன், உப்பு சேர்த்து தேவையான தண்ணீரைவிட்டு கொதிக்கவிடவும். சுவையான உணவு தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...