திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பாட்டி வைத்தியம்...

வாழைப்பூ, முருங்கைக்கீரை ஆகிய இரண்டையும் சேர்த்து வதக்கி, ஒருவாரம் சாப்பிட்ட வந்தால் குடல் புண், வாய்ப்புண் குணமாகும்.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 6:21 am

ஆர். ஜெயலட்சுமி

வாழைப்பூ, முருங்கைக்கீரை ஆகிய இரண்டையும் சேர்த்து வதக்கி, ஒருவாரம் சாப்பிட்ட வந்தால் குடல் புண், வாய்ப்புண் குணமாகும்.

கோதுமையை பொன்னிறமாக வதக்கி, அரைத்து மாவாக்கி, காலை, மாலை இரு வேளையும் ஒரு அவுன்ஸ் மாவு எடுத்து தேவையான அளவு தேனுடன் பிசைந்து சாப்பிட்டால் கை, கால், மூட்டுவலி நீங்கும்.

ஒரு கோப்பை காபி டிகாக்ஷனை எடுத்து, அதில் பாதி எலுமிச்சம் பழச்சாற்றை பிழிந்து சூட்டுடன் உடனே குடித்தால் தீராத தலைவலி நீங்கும்.

சுக்குத்தூள், பெருஞ்சீரகம் சேர்த்து வாயில் போட்டு சுவைத்தால், வாய்க் கொப்புளங்கள் குணமாகும்.

இடுப்பில் வலி ஏற்பட்டால் இலுப்பை எண்ணெயை பாதிக்கப்பட்ட பகுதியில் பூசி வர குணமாகும்.

பொன்னாங்கண்ணி கீரையுடன் வெள்ளைப் பூண்டை சாப்பிட சர்க்கரை நோய் தீரும்.

வெள்ளை முள்ளங்கியால் சூதகப்பட்டு தடுக்கப்படும். சிவப்பு முள்ளங்கியால் பெரும்பாடு குறையும். இரண்டும் நீரிழிவுக்குச் சிறந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.