பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

சமையல் குறிப்புகள்...

பூண்டை வாங்கியதும் பல், பல்லாக உதிர்த்து காற்றாட விடுவது நல்லது. ஈரம் உலர்ந்தால் அழுகாது. கருக்காமலும் இருக்கும்.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 2:51 am

முக்கிமலை நஞ்சன்

பூண்டை வாங்கியதும் பல், பல்லாக உதிர்த்து காற்றாட விடுவது நல்லது. ஈரம் உலர்ந்தால் அழுகாது. கருக்காமலும் இருக்கும்.

கொத்துமல்லி இலை நீண்ட நாள்கள் புதியதாக இருக்கும்படி வைக்க, அவற்றை வாழை இலையில் வைத்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்தால் போதும்.

கிண்ணத்தில் படிந்துள்ள காபி, டீ கறைகளை நீக்க உப்புத் தூளைத் தேய்த்து கழுவினால் போதும்.

உருளை, சேனைக் கிழங்குகளை ரோஸ்ட் கறி செய்யும்போது, கடைசியில் ரஸ்க் தூளைக் கொஞ்சம் தூவி ஒரு புரட்டினால் போதும். கறி நன்கு சுவை மிகுந்திருக்கும்.

 ரவா உப்புமா மீதமாகிவிட்டால், அதில் சிறிதளவு அரிசி மாவைக் கலந்து வடை போல் தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.