எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

கடலைப் பருப்பு மாங்காய் மிக்சர்

கடலைப் பருப்பை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 12:54 pm

ஆர். ஜெயலட்சுமி

தேவையானவை:

கடலைப் பருப்பு 250 கிராம்
மாங்காய் 1
பச்சை மிளகாய் 3
தேங்காய்த் துருவல் அரை கிண்ணம்
மஞ்சள் பொடி 2 தேக்கரண்டி
சர்க்கரை 3 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு

செய்முறை: 

கடலைப் பருப்பை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் பருப்பை களைந்து எடுத்து அரை கிண்ணம் பருப்பை தனியாக வைத்து வைத்துகொண்டு மீதியுள்ள பருப்பை அரைப் பதமாக அரைத்துகொள்ள வேண்டும். மாங்காயைத் தோல் சீவி பச்சை மிளகாயையும் மாங்காயையும் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அரைத்த கடலைப் பருப்பை தனியாக எடுத்து வைத்த அரை கிண்ணம் கடலைப் பருப்பு, பொடியாக நறுக்கிய மாங்காய்,   பச்சை மிளகாய், கொத்தமல்லி,  தேங்காய்த் துருவல்,  மஞ்சள் பொடி, சர்க்கரை, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும். 

வாணலியில் எண்ணெய் விட்டு  காய்ந்தவுடன் கடுகு, கறிவேப்பிலை, சீரகம் ஆகியவற்றை தாளித்து கலவையைச் சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி இறக்க வேண்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.