மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

வீட்டுக் குறிப்புகள்...

அடைக்கு மாவு அரைக்கும்போது கொஞ்சம் புதினா இலைகளைச் சேர்த்து அரைத்து, மெல்லிய அடைகளாக வார்க்க வேண்டும். மிதமான புதினா வாசனையில் மிகவும் சுவையாக இருக்கும்.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 12:30 am


அடைக்கு மாவு அரைக்கும்போது கொஞ்சம் புதினா இலைகளைச் சேர்த்து அரைத்து, மெல்லிய அடைகளாக வார்க்க வேண்டும். மிதமான புதினா வாசனையில் மிகவும் சுவையாக இருக்கும்.

சாம்பார் செய்ய துவரம் பருப்பு மட்டும் பயன்படுத்தாமல், சம அளவு பாசிப் பருப்பை சேர்த்து பயன்படுத்தினால் சாம்பார் சுவையாக இருக்கும்.

அவலை நீர் சேர்த்து ஊறவைக்கும்போது கொஞ்சம் மோர் சேர்த்துக் கொண்டால் கார அவல் டிஷ் சுவை இரு மடங்காகும். எளிதில் ஜீரணமாகும்.

பாகற்காய் கூட்டு, குழம்பு செய்யும்போது அரை டம்ளர் தேங்காய் பால் சேர்த்து கொண்டால் கசப்புநீங்கும்.

சமைத்த பாத்திரத்தில் இருந்து நேரடியாக உணவை உண்ணக் கூடாது.

தலை பாரமாக இருக்கிறதா? நொச்சி இலையை உப்பு போட்டு வதக்கி, இளஞ்சூட்டுடன் நெற்றியில் புற்றுபோல் போட்டுக் கொண்டால், உடனே சரியாகிவிடும்.

மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு மார்புச் சளி கட்டிக் கொள்ளும். இதற்கு துளசி கஷாயம் கொடுத்தால் ஆரோக்கியம் அடையலாம்.

பாதாம், பிஸ்தா போன்றவற்றை பிளாஸ்டிக்  டப்பிகளில் போட்டு வைப்பதற்குப் பதிலாக, கண்ணாடி ஜாரில் போட்டு ஒரு தேக்கரண்டி சர்க்கரையைச் சேர்த்து குலுக்கி வைத்தால் நீண்ட நாள்களுக்குத் தடித்து போகாது.

தொகுப்பு : உ.ராமநாதன், ஆர்.கே.லிங்கேசன், பத்மஜா, அ.ப.ஜெயபால்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.