லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பூண்டு பொடி 

வாணலியை சூடாக்கி உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு போட்டு மிதமான சூட்டில் வாசனை வரும் வரை வறுக்கவும்.

News image
Updated On :27 நவம்பர் 2022, 12:30 am

தேவையான பொருள்கள்:

பூண்டு - 100 கிராம் 
உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1/4 தேக்கரண்டி
எள் - 1/4  தேக்கரண்டி
பொட்டுக்கடலை - 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 12
கறிவேப்பிலை - சிறிதளவு
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
புளி - சிறிதளவு
நாட்டு சர்க்கரை - 1 தேக்கரண்டி

செய்முறை: 

வாணலியை சூடாக்கி உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு போட்டு மிதமான சூட்டில் வாசனை வரும் வரை வறுக்கவும்.  பிறகு எள், பொட்டுக்கடலை, தேங்காய் துருவல் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். மிளகாய் வற்றல், கறிவேப்பிலை,  சேர்த்து மொறு மொறுப்பாக வரும் வரை வதக்கி தனியே எடுத்து வைக்கவும்.பிறகு நல்லெண்ணெய் சேர்த்து பூண்டு லேசாக நசுக்கி சேர்த்து பொன்னிறமாக மொறு மொறுவென வரும் வரை வதக்கி தனியே எடுத்து வைக்கவும். பூண்டு நன்றாக வதக்கி கொள்ளவும். 

வறுத்த பூண்டு ஆறியபின்  மிக்ஸியில் போட்டு உப்பு, பெருங்காயத்தூள், புளி, நாட்டு சக்கரை சேர்த்து அரைத்து எடுக்கவும். ஆற வைத்து பாட்டிலில் போட்டு வைக்கவும். பூண்டு பொடி தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.