திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

வாழைத் தண்டு வடாம்

பச்சரியை நீர்விட்டு 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஜவ்வரிசியை நீர்விட்டு, இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

News image
Updated On :8 மே 2022, 11:40 am


தேவையானவை:

பச்சரிசி- 200 கிராம்
ஜவ்வரிசி- 100 கிராம்
வாழைத் தண்டு-1
மிளகாய் -4
பெருங்காயப் பொடி- 1 தேக்கரண்டி
எண்ணெய்- 1 தேக்கரண்டி
தக்காளி-2
உப்பு-தேவையான அளவு

செய்முறை: 

பச்சரியை நீர்விட்டு 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஜவ்வரிசியை நீர்விட்டு, இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். வாழைத் தண்டை பொடியாக நறுக்க வேண்டும். தக்காளியை சாறெடுக்க வேண்டும். பச்சரிசியை அரைத்து கூடவே ஜவ்வரிசி, மிளகாய்,  தக்காளிச் சாறு, வாழைத் தண்டு, பெருங்காயம், உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்தெடுக்க வேண்டும்.

கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, தேவையான தண்ணீரைவிட்டு கொதி வந்ததும் கூழ்மாவை கொஞ்சம்  தண்ணீரில் கரைத்து ஊற்றி எண்ணெய் விட்டு நன்றாகக் கூழாக்க வேண்டும். 

கையில் ஒட்டாமல் வர வேண்டும். ஒரு வெள்ளைத் துணியை வெயிலில் விரித்து, கூழ்மாவை சிறு உருண்டைகளாக வைத்து வெயிலில் நன்றாக காய வைத்து எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.