திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பிரண்டை வடாம்

பச்சரிசியை நீரில் 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஜவ்வரிசியை இரண்டு மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும்

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:11 am

ஆர். ஜெயலட்சுமி

தேவையானவை: 

பச்சரிசி- 200 கிராம்
ஜவ்வரிசி- 100 கிராம்
வத்தல் மிளகாய்-5
பிரண்டை -4  கம்பு
பெருங்காயப் பொடி- 1 தேக்கரண்டி
எண்ணெய்- 4 தேக்கரண்டி
உப்பு- தேவையானது

செய்முறை: 

பச்சரிசியை நீரில் 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஜவ்வரிசியை இரண்டு மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும். 

பச்சரியை அரைத்து கூடவே ஜவ்வரிசி, வத்தல் மிளகாய், பொடியாய் நறுக்கிய பிரண்டை, பெருங்காயப்பொடி, உப்பு சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும். கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, தேவையான தண்ணீரைவிட்டு கொதி வந்ததும் அரைத்த விழுதை கொஞ்சம் நீர் விட்டு கரைத்து விட வேண்டும். 

பின்னர் எண்ணெய் விட்டு கூழ்போல காய்ச்சி கீழே இறக்க வேண்டும். மாவு கையில் ஒட்டாமல் இருந்தால், அதுதான் சரியான பதம். ஒரு வெள்ளைத் துணியை வெயிலில் விரித்து, கூழ் மாவை முள்ளுத் தேன் குழல் அச்சில் போட்டு, பிழிய வேண்டும். சிறிது, சிறிதாகப் பிழிந்து நன்றாகக் காய்ந்ததும் விரித்து எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.