திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

உருளைக்கிழங்கு கபாப்

உருளைக்கிழங்கை  வேக வைத்துத் தோலுரித்து  நன்றாக  மசித்துக் கொள்ள வேண்டும்.  அதில் கடலைமாவு,  தனியா,  மிளகாய்த்தூள்,  மஞ்சள் தூள்,  ஏலக்காய்,  உப்பு,  கசகசா  சேர்த்து  நன்றாக  கலந்து  கொள்ள வேண்டும்.

News image
Updated On :16 மார்ச் 2022, 12:30 am


தேவையானவை:

உருளைக்கிழங்கு  - அரை கிலோ
பெரிய வெங்காயம்  -  3
கடலைமாவு  -  50 கிராம்
தனியாத்தூள்  - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்  - அரை தேக்கரண்டி
மிளகாய்த் தூள்  - அரை தேக்கரண்டி
கசகசா - அரை தேக்கரண்டி
ஏலக்காய்த்தூள்  -  சிறிதளவு
நெய்,  உப்பு  - தேவைக்கேற்ப


செய்முறை:  


உருளைக்கிழங்கை  வேக வைத்துத் தோலுரித்து  நன்றாக  மசித்துக் கொள்ள வேண்டும்.  அதில் கடலைமாவு,  தனியா,  மிளகாய்த்தூள்,  மஞ்சள் தூள், ஏலக்காய்,  உப்பு,  கசகசா  சேர்த்து  நன்றாக  கலந்து  கொள்ள வேண்டும். வாணலியில்  சிறிதளவு  எண்ணெய்விட்டுப்  பொடியாக  நறுக்கிய வெங்காயத்தைப்  போட்டுப்  பொன்னிறமாக  வதக்கிக்  கொண்டு அதில் உருளைக்கிழங்குக்  கலவையைக்  கொட்டிச் சிறிது  நேரம்  கிளறி  இறக்க வேண்டும்.

கலவையை  ஒரே அளவுள்ள  சிறு உருண்டைகளாக்கி  வைக்கவும்.  அடுப்பில்  தோசைக் கல்லை வைத்துக் காய்ந்தவுடன்  உருண்டைகளை வடை போல்  தட்டி  தோசைக் கல்லில்  வைத்து நெய்விட்டு  இரண்டு புறமும்  சிவக்க வேக வைத்து  எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.