சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

நவதானிய அடை 

அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து களைந்து இஞ்சி, மிளகு, மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்க வேண்டும்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:30 am

ஆர். ஜெயலட்சுமி

தேவையானவை: 

புழுங்கலரிசி- 200 கிராம்
முளை கட்டிய கொள்ளு, சோளம், கம்பு, தினை, கேழ்வரகு, பாசிப்பயிறு, காராமணி, கறுப்பு உளுந்து, கொண்டை கடலை- தலா 50 கிராம், இஞ்சி- 2 துண்டு, மிளகு- 10, மிளகாய் வற்றல்-5, உப்பு, எண்ணெய்- தேவையான அளவு.

செய்முறை: 

அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து களைந்து இஞ்சி, மிளகு, மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்க வேண்டும். முளை கட்டிய நவ தானியங்கள், பாசிப்பயிறு, கறுப்பு உளுந்து, கொண்டை கடலையைத் தனியாக அரைத்து அரிசி மாவுடன் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். தோசைக் கல்லை அடுப்பில் வைத்து வைத்து காய்ந்ததும் மாவை ஒவ்வொரு கரண்டியாக ஊற்றி பரவலாக இழுத்து, எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பிப் போட்டு பொன்னிறமாக வெந்து எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.