நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

பாட்டி வைத்தியம்

நான்கு ஓமவல்லி இலை, சிறிய துண்டு சுக்கு, ஐந்து நல்ல மிளகு, கருப்பட்டி ஆகியவற்றைச் சேர்த்து கஷாயம் செய்து குடித்துவர ஜலதோஷம் குணமாகும்.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2022, 12:30 am

நான்கு ஓமவல்லி இலை, சிறிய துண்டு சுக்கு, ஐந்து நல்ல மிளகு, கருப்பட்டி ஆகியவற்றைச் சேர்த்து கஷாயம் செய்து குடித்துவர ஜலதோஷம் குணமாகும்.

தூக்கமில்லாது அவதிப்படுவோர் சிறிது சீரகத்தை வறுத்து பொடியாக்கி, ஒரு செவ்வாழைப் பழத்துடன் இரவு சாப்பிட்டால் நன்கு தூக்கம் வரும்.

கொத்தமல்லி விதைகளை லேசாக வறுத்து, துவையல் செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர கிறுகிறுப்பு மாறும்.
 

-ஆர்.ராதிகா

சிறுநீர் எரிச்சல், சிறுநீர் அடைப்பு போன்ற பிரச்னைகளுக்கு உளுந்து ஊறிய நீரைப் பருகினால், நிவாரணம் கிடைக்கும். சுக்கு,  பனை வெல்லம்,  உளுந்து ஆகியவற்றை சேர்த்து களியாகக் கிளறி சாப்பிட்டால், உடலுக்கு பலமுண்டாகும்.

மாதவிடாய் தள்ளிப் போகிறது என்றாலோ, பி.சி.ஓ.டி. எனும் சினைப்பை நீர்க்கட்டிகள் பிரச்னையில் அவதிப்பட்டாலோ, கருஞ்சீரகத்தை நன்றாக அரைத்துப் பொடித்து அதில் ஓர் தேக்கரண்டியைத் தேனில் குழைத்து 10 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர பிரச்னை சரியாகும்.

மழை,  குளிர்காலத்தில் கிரீன் டீ அல்லது கொதிக்கும் நீரில் சில நிமிடங்கள் அன்னாசிப் பூவைப் போட்டு, வடிகட்டி பருகினால் சுவாசம் எளிதாகும்.  தூதுவளை இலைகளைத் துவையலாகச் செய்யும்போது, சிறிதளவு அன்னாசிப் பூப்பொடி சேர்த்தால் சோர்ந்திருக்கும் மூச்சுக் குழாய் உற்சாகமடையும்.

பொடியாக நறுக்கிய நாட்டுத் தக்காளி துண்டுகள், வதக்கிய சின்ன வெங்காயம், மிளகுத்தூள், பொடித்த அன்னாசிப் பூ போன்றவற்றை நெய்யில் வதக்கி உணவாகச் சாப்பிட்டால், கப நோய்களை எதிர்த்து நிற்கும் வன்மையை உடலுக்கு அளிக்கும்.

தொண்டை கரகரக்கும்போது, சிற்றரத்தையை நெருப்பில் எரித்து அதை தேனில் குழைத்து அதன் உரைப்பு நாவிலும் தொண்டையிலும் தவழும்படி சாப்பிட்டால் கரகரப்பு கரைந்து தொண்டை இதமாகும்.

ஈரல் சார்ந்த நோய்களுக்கு வெந்தயம், பெருங்காயம், கறிமஞ்சள், கடுகு ஆகியவற்றை நெய்விட்டு வறுத்து பொடியாக்கி சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். வெந்தயம், பெருங்காயம், துவரம் பருப்பு சேர்த்து மண்பானையில் தயாரித்த உணவை சூடாக சாப்பிட்டால் உடல் எரிச்சல் குறையும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.