தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

வாழைப்பூ  முருங்கைக்கீரை சூப் 

முதலில் வாழைப்பூவையும் முருங்கைக் கீரையும்  ஆய்ந்து சுத்தம் செய்து நன்றாக கழுவி ஒரு வாணலியில் சிறிது நெய் சேர்த்து வதக்கவும்.

News image
Updated On :17 நவம்பர் 2021, 12:30 am

தேவையானவை:

வாழைப்பூ - 200 கிராம் 
முருங்கைக்கீரை  - 100 கிராம் 
சிறிய வெங்காயம் - 6 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது  - 20 கிராம் 
மிளகு - 10 கிராம் 
கருஞ்சீரகம் -10 கிராம் 
வெந்தயம் - 1 கிராம் 
சோம்பு - 10 கிராம் 
கறிவேப்பிலை - 5 கிராம் 
பட்டை - 5 கிராம் 
பிரியாணி இலை - 2
கிராம்பு - 4
மல்லி விதை -5 கிராம் 
கொத்துமல்லி - சிறிது (பொடியாக நருக்கியது )
நெய் - 5 கிராம்
எண்ணெய் -  தேவைக்கேற்ப

செய்முறை :  

முதலில் வாழைப்பூவையும் முருங்கைக் கீரையும் ஆய்ந்து சுத்தம் செய்து நன்றாக கழுவி ஒரு வாணலியில் சிறிது நெய் சேர்த்து வதக்கவும். பின்னர் அதை நன்றாக மிக்சியில் அரைக்கவும். அதே வாணலியில் மிளகு, கருஞ்சீரகம், சோம்பு, கறிவேப்பிலை, பட்டை, பிரியாணி இலை, கிராம்பு, வெந்தயம் மற்றும் மல்லி விதையைச் சேர்த்து லேசாக வறுக்கவும், பின்னர் அதை நன்றாக மிக்ஸியில் பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு சூப் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடுபடுத்தவும், பின் அதில் வெட்டிய சிறிய வெங்காயம், கறிவேப்பிலையை வதக்கவும், பின் அதில் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும், பின் அதில் அரைத்த வாழைப்பூ முருங்கைக்கீரை விழுதை யிட்டு லேசாக வதக்கி இரண்டு கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும். இது மிக ஆரோக்கியமான சூப் இதில் கொஞ்சம் நறுக்கிய கொத்துமல்லியை மேலாக தூவி சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து பருகலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.