தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

பட்டாசுகளை  பாதுகாப்பாக  வெடிப்போம்!

குழந்தைகளுக்கு வயதிற்கு ஏற்ற வெடிகளை வாங்கிக்கொடுங்கள். சிறுவயதினருக்கு அணுகுண்டு, புல்லட் வெடி, ராக்கெட் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

News image
Updated On :3 நவம்பர் 2021, 12:30 am

குழந்தைகளுக்கு வயதிற்கு ஏற்ற வெடிகளை வாங்கிக்கொடுங்கள். சிறுவயதினருக்கு அணுகுண்டு, புல்லட் வெடி, ராக்கெட் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

மொட்டை மாடி, திறந்தவெளிகளில் பட்டாசு வெடிப்பது சிறந்தது. 

குழந்தைகள்  பட்டாசு வெடிக்கும்போது, அருகில் பெற்றோர் கட்டாயம் இருக்க வேண்டும்.

பட்டாசு வெடிக்கையில்  பெரும்பாலும், தளர்வான காட்டன் துணிகளை உடுத்தியிருப்பது நல்லது.

பட்டாசு வெடிக்கும்போது ஒரு பக்கெட் தண்ணீரை அருகில் வைத்து கொள்வது சிறப்பானது. விபத்து ஏற்பட்டால், உடனே தண்ணீரை ஊற்றி அணைக்கலாம்.

சுவாசப் பிரச்னை இருப்பவர்கள், பட்டாசு வெடிக்கும் இடத்தில் புகை நிறைய இருக்கும் என்பதால்,  அங்கே  நிற்பதை   தவிர்ப்பது நல்லது.

சில குழந்தைகள்  பட்டாசை  கையில் பிடித்து கொளுத்திப்போடும் பழக்கம் வைத்திருக்கிறார்கள்.  அவ்வாறு கொளுத்திப்போடுவது மிக மிக ஆபத்தான விஷயம். இம் மாதிரி பட்டாசு வெடிப்பதை பெரியவர்கள்  ரசித்து மகிழாமல், தவிர்த்து விட வேண்டும். 

வெடி வெடிக்கையில் உடலில் தீக்காயம் ஏற்பட்டால் தண்ணீர் ஊற்றக்கூடாது என்று சிலரும், தண்ணீர் ஊற்றலாம் என்று சிலரும் கூறுகிறார்கள். இதில் குழப்பமே வேண்டாம்.  மருத்துவர்கள்  ஆலோசனைப்படி தீக்காயத்தின் மீது தண்ணீர் ஊற்றலாம். தப்பில்லை. தீக்காயத்தின் மீது தண்ணீர் ஊற்றுவதால், தோலில் ஏற்படும் சூடு குறையும். காயத்தின் ஆழம் அதிகமாகாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.