மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

பலாக்கொட்டை கறி 

பலாக் கொட்டையை வேக வைத்து தோல் நீக்கி இரண்டாக நறுக்கிக் கொள்ள வேண்டும். தேங்காயைத் துருவி பால் எடுக்க வேண்டும்.

News image
Updated On :28 ஜூலை 2021, 10:48 am

தேவையானவை:

பலாக் கொட்டை - 1 கிண்ணம்
தேங்காய் - 1
பச்சைமிளகாய் - 4
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
தனியாத் தூள் - 1 தேக்கரண்டி
அரிசி - 1 தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - 1 மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 2
மிளகாய்வத்தல் - 4
எண்ணெய் , உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

பலாக் கொட்டையை வேக வைத்து தோல் நீக்கி இரண்டாக நறுக்கிக் கொள்ள வேண்டும். தேங்காயைத் துருவி பால் எடுக்க வேண்டும். ஒரு மேசைக்கரண்டி அரிசியுடன் தேங்காய்த் துருவல், மிளகாய் முதலியவற்றை வறுத்து அரைக்க வேண்டும். வெங்காயத்தை நறுக்கி தனியாக அரைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டு அடுப்பில் வைத்து அரைத்த வெங்காயவிழுதைப் பொன்னிறமாக வதக்க வேண்டும். இதனுடன் தனியா தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், பச்சை மிளகாய் முதலியவற்றையும் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர், நறுக்கி வைத்திருக்கும் பலாக் கொட்டை, உப்பு இரண்டையும் போட்டு ஐந்து நிமிடம் வதக்கிய பிறகு தேங்காய்ப் பாலைச் சேர்த்து , அரைத்த விழுதையும் சேர்த்து கொஞ்சம் இறுகிய பிறகு கறிவேப்பிலை, கொத்துமல்லி தூவி கீழே இறக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.