டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஆச்சரியமான சகோதரிகள்..!

"ஐ ஏ எஸ்' அதிகாரி ஆவது  பலரது லட்சியம். என்றாலும்  பெரும்பாலானவர்களுக்கு "ஐ ஏ எஸ்'  வெறும் கனவாகவே இருந்துவிடுகிறது.

News image
ஆச்சரியமான சகோதரிகள்..!
Updated On :27 ஜனவரி 2024, 7:26 pm

சக்ரவர்த்தி

"ஐ ஏ எஸ்' அதிகாரி ஆவது பலரது லட்சியம். என்றாலும் பெரும்பாலானவர்களுக்கு "ஐ ஏ எஸ்' வெறும் கனவாகவே இருந்துவிடுகிறது. ஒரு குடும்பத்தில் ஒருவர் ஐ ஏ எஸ் ஆவதே குதிரைக் கொம்பாக இருக்கும் போது ஒரே குடும்பத்தில் மூன்று சகோதரிகள் ஐ ஏ எஸ் ஆனதுடன், பல கால இடைவெளிகளில் ஒரே மாநிலத்தின் தலைமைச் செயலாளராகப் பணி புரிந்திருக்கிறார்கள் என்றால் நம்ப முடியுமா ? ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்.

மீனாட்சி, ஊர்வசி , கேஷினி தான் அந்த அபூர்வ சகோதரிகள்.

""அப்பா ஜெகதீஷ் சந்தர் பொலிட்டிகல் சயின்ஸ் பாடத்தில் பேராசிரியராகப் பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் பணி புரிந்தவர். எங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தவரும் அவரே. நாங்கள் மூவரும் ஐ ஏ எஸ் அதிகாரிகளாக வேண்டும் என்பது அவரது விருப்பம். நாங்களும் அப்பா வழியில் பொலிட்டிகல் சயின்ஸ் பாடம் படித்தோம். பல்கலைக்கழகத் தேர்வுகளில், பொலிட்டிகல் சயின்ஸ் பாடத்தில் முதல் மாணவிகளாகத் தேறினோம். ஐ ஏ எஸ் தேர்விலும் அந்த பாடத்தையே தேர்ந்தெடுத்து படித்தோம். சகோதரிகளில் யாரும் தனியாகப் பயிற்சி வகுப்புகளுக்குப் போகவில்லை.

ஒருவர் பின் ஒருவராக ஐ ஏ எஸ் தேர்வின் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று ஐஏஎஸ் அதிகாரி ஆகி, அப்பாவின் கனவை நனவாக்கினோம்.

எங்களை ஹரியாணா பிரிவில் சேர்த்தார்கள். மூத்த தமக்கை மீனாட்சி 1969 -இல் ஐஏஎஸ் அதிகாரி ஆனார். இரண்டாம் தமக்கை ஊர்வசி ஐஏஎஸ் அதிகாரி ஆனது 1975 -இல். நான் 1983- இல் ஐஏஎஸ் அதிகாரி ஆனேன்.

மீனாட்சி ஹரியாணா மாநிலத்தின் தலைமைச் செயலாளராக 2005-இல் பணி ஓய்வு பெற்றார். ஊர்வசி தலைமைச் செயலாளராகப் பணி மூப்பு பெற்றது 2012 -இல். கேஷினியான நான் ஹரியாணாவின் தலைமைச் செயலாளராகப் பொறுப்பு ஏற்றது சென்ற ஆண்டு (2019 ) தான். அடுத்த ஆண்டு பணி ஓய்வு'' என்கிறார் கேஷினி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.