ஆச்சரியமான சகோதரிகள்..!
"ஐ ஏ எஸ்' அதிகாரி ஆவது பலரது லட்சியம். என்றாலும் பெரும்பாலானவர்களுக்கு "ஐ ஏ எஸ்' வெறும் கனவாகவே இருந்துவிடுகிறது.


"ஐ ஏ எஸ்' அதிகாரி ஆவது பலரது லட்சியம். என்றாலும் பெரும்பாலானவர்களுக்கு "ஐ ஏ எஸ்' வெறும் கனவாகவே இருந்துவிடுகிறது. ஒரு குடும்பத்தில் ஒருவர் ஐ ஏ எஸ் ஆவதே குதிரைக் கொம்பாக இருக்கும் போது ஒரே குடும்பத்தில் மூன்று சகோதரிகள் ஐ ஏ எஸ் ஆனதுடன், பல கால இடைவெளிகளில் ஒரே மாநிலத்தின் தலைமைச் செயலாளராகப் பணி புரிந்திருக்கிறார்கள் என்றால் நம்ப முடியுமா ? ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்.
மீனாட்சி, ஊர்வசி , கேஷினி தான் அந்த அபூர்வ சகோதரிகள்.
""அப்பா ஜெகதீஷ் சந்தர் பொலிட்டிகல் சயின்ஸ் பாடத்தில் பேராசிரியராகப் பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் பணி புரிந்தவர். எங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தவரும் அவரே. நாங்கள் மூவரும் ஐ ஏ எஸ் அதிகாரிகளாக வேண்டும் என்பது அவரது விருப்பம். நாங்களும் அப்பா வழியில் பொலிட்டிகல் சயின்ஸ் பாடம் படித்தோம். பல்கலைக்கழகத் தேர்வுகளில், பொலிட்டிகல் சயின்ஸ் பாடத்தில் முதல் மாணவிகளாகத் தேறினோம். ஐ ஏ எஸ் தேர்விலும் அந்த பாடத்தையே தேர்ந்தெடுத்து படித்தோம். சகோதரிகளில் யாரும் தனியாகப் பயிற்சி வகுப்புகளுக்குப் போகவில்லை.
ஒருவர் பின் ஒருவராக ஐ ஏ எஸ் தேர்வின் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று ஐஏஎஸ் அதிகாரி ஆகி, அப்பாவின் கனவை நனவாக்கினோம்.
எங்களை ஹரியாணா பிரிவில் சேர்த்தார்கள். மூத்த தமக்கை மீனாட்சி 1969 -இல் ஐஏஎஸ் அதிகாரி ஆனார். இரண்டாம் தமக்கை ஊர்வசி ஐஏஎஸ் அதிகாரி ஆனது 1975 -இல். நான் 1983- இல் ஐஏஎஸ் அதிகாரி ஆனேன்.
மீனாட்சி ஹரியாணா மாநிலத்தின் தலைமைச் செயலாளராக 2005-இல் பணி ஓய்வு பெற்றார். ஊர்வசி தலைமைச் செயலாளராகப் பணி மூப்பு பெற்றது 2012 -இல். கேஷினியான நான் ஹரியாணாவின் தலைமைச் செயலாளராகப் பொறுப்பு ஏற்றது சென்ற ஆண்டு (2019 ) தான். அடுத்த ஆண்டு பணி ஓய்வு'' என்கிறார் கேஷினி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...