தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஈரப் பலாக்காய்

தென்னிந்தியா மற்றும் இலங்கையில் நிறைய காணப்படுவது இந்த ஈரப்பலாக்காய் (Bread fruit) . இதில் அதிகப்படியான ஆன்டி ஆக்சிடென்ட்டுக்கான சத்துகள் காணப்படுகிறது.

News image
Updated On :23 செப்டம்பர் 2020, 12:30 am


தென்னிந்தியா மற்றும் இலங்கையில் நிறைய காணப்படுவது இந்த ஈரப்பலாக்காய் (Bread fruit) . இதில் அதிகப்படியான ஆன்டி ஆக்சிடென்ட்டுக்கான சத்துகள் காணப்படுகிறது.
இதிலுள்ள ஒமேகா 3+6 , இருதய ஆரோக்கியத்துக்கும், மூளை மற்றும் மன வளர்ச்சிக்கும் உதவுகிறது. மேலும் தோல் மற்றும் தலை ரோமத்திற்கு மிகவும் நல்லது. மலச்சிக்கலை தவிர்க்க உதவுகிறது.
இதனை கறி அல்லது குழம்பு செய்து சாப்பிட்டால் அழற்சி வீக்கங்கள் இருந்தாலும் கரைத்துவிடும். இந்த அயற்சி வீக்கம் தான் பல வியாதிகளுக்கு அடிப்படை.. ஆக அதனை நீக்குவதால் பெரும்பாலும் நோய்கள் நம்மை அண்டாமல் நிம்மதியாக இருக்கலாம்.
உடலில் தற்காப்பு வலிமையை கூட்டும் இதில் உள்ள அமினோ அமிலங்கள், உடலுக்கு தேவையான செல்களை உற்பத்தி செய்து, உடலின் அனைத்து பாகங்களும் சிறப்பாக செயல்பட உதவும். இதனால்தான் இந்த ஈரப் பலாக்காயை, பில்டிங் பிளாக் ( கட்டடக் கல்) என அழைப்பர். உடலுக்கே உரமாக காக்கும்.
நமது உடலுக்கு, நமக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு வைட்டமின் சி தேவையோ, அத்தனையும் இதில் உள்ளது.
மேலும் இரும்பு, மக்னீசியம், கேல்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், ப்ரோட்டின்,தையமின், விட்டமின் ஏ என எல்லாம் இதில் உள்ளன. இதனால் இதனை முழுமையாக பயன்படுத்துவதன் மூலம் உடலையே வலிமையுடன் பராமரிக்க முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.