கிராமத்தின் வசதிக் குறைவுதான் எனக்கு பலமாக உரமாக அமைந்தது. போக்குவரத்து வசதி இல்லாமல் எனது கிராம மக்கள் கஷ்டப்படுகிறார்கள். பஸ் பிடிக்க கால் நடையாக பல கி.மீ. நடக்க வேண்டும். மருத்துவ வசதி இல்லாமல்... ஆம்புலன்ஸ் கிடைக்காமல் பலர் கிராமத்தில் இறந்துள்ளனர். நோயாளியைப் பல கி.மீ. தூரம் தூக்கிச் செல்லும் போதே இறந்து விடுவார்கள். இவற்றை நேரில் பல முறை பார்த்திருக்கிறேன். அழுதிருக்கிறேன். சில சிக்கலான, துயரமான தருணங்களில் தோல்வியை ஒப்புக் கொண்டு அப்படியே விட்டு விடுவோமா என்று தோன்றும். என்றாலும் வென்றே தீர வேண்டும் என்று மனம் சோகம், விரக்தியின் பக்கம் போவதில் இருந்து மீட்பேன். தலைவிதியை மாற்ற, ஐஏஎஸ் தேர்வுக்குத் தயாரானேன். இப்போது ஐஏஎஸ் தேர்வு பெற்றிருப்பதால் எனது கிராம மக்களுக்கு எல்லா வசதிகளும் கிடைக்க என்னால் ஆன நடவடிக்கைகளை எடுப்பேன்.. உதவுவேன்'' என்கிறார் பிரியங்கா.