இந்தியாவில், மகளிர் கிரிக்கெட் விளையாடுவதைப் பார்க்க... உற்சாகப்படுத்த, பெண்களே அதிகமாக வருவதில்லை. அதே சமயம், ஆண்கள் ஆடும் கிரிக்கெட்டை, பெண்கள் செலவு செய்து வெளிநாடு சென்றும் பார்க்கிறார்கள்... உற்சாகப் படுத்துகிறார்கள். மகளிர் கிரிக்கெட்டைப் பார்க்க வரும் கூட்டத்தை விரல் விட்டு எண்ணிவிடலாம். பார்வையாளர்கள் நூறைத் தாண்டினாலே ஒரு சாதனைதான். மார்ச் 15ல் ப20 உலகக் கோப்பைக்கான மேட்ச் பெங்களூருவில் நடந்தது. இந்திய மகளிர் அணியும், பங்களாதேஷ் மகளிர் அணியும் மோதியது. இந்த ஆட்டத்தைக் காண வந்தவர்களின் எண்ணிக்கை இருநூறைத் தாண்டவில்லை. ப20 மேட்ச்சுகளுக்கே இந்த கதி என்றால், சாதாரண மேட்ச்சிற்கு எவ்வளவு பார்வையாளர்கள் வருவார்கள் என்று சொல்ல வேண்டியதில்லை.