உலகையே ஆட்டிப் படைத்து வரும் கரோனா தொற்றுக்கு அஞ்சாதவர்கள் யாருமில்லை. கண்ணுக்குத் தெரியாத இந்த தீநுண்மி லட்சக்கணக்கான உயிர்களைக் கொன்று வருவதுதான் இதற்குக் காரணம்.
கரோனா தொற்று பாதிப்பு முடிவைக் கண்டறிய தொடக்கத்தில் இரண்டு நாள்கள் வரையிலானது. தற்போது தொற்றை துல்லியமாகக் கண்டறிய 24 மணி நேரம் ஆகிறது. உடனடி பாதிப்பு முடிவை அறிந்து கொள்ள குறைந்தது அரை மணி நேரமாகிறது. ஆனால் அந்த முடிவை யாரும் நம்புவதில்லை.
எனினும், உலகம் முழுவதும் கரோனா தொடர்பான கண்டுபிடிப்புகள் தினந்தோறும் புதிது புதிதாய் வந்து கொண்டிருக்கின்றன.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்துடன் இணைந்து பிரித்தானிக்ஸ் என்ற ஸ்டார்அப் நிறுவனம் கரோனா தொற்று இருக்கிறதா, இல்லையா என்பதை நொடிப் பொழுதில் கண்டறியும் கருவி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது.
மலேசியாவில் இருந்து தினந்தோறும் லட்சக்கணக்கானோர் சிங்கப்பூருக்கு பணியாற்ற சென்று வருவதால் அவர்களுக்கு கரோனா சோதனையை நொடிப் பொழுதில் செய்திட சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது. சிங்கப்பூர் சுகாதார நலத்துறை அமைச்சகத்துடன் இணைந்து இந்த கருவியை மலேசிய எல்லைப் பகுதியில் நிறுவ பிரித்தானிக்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்தப் பரிசோதனையுடன் கொரோனா ராப்பிட் ஆன்டிஜன் பரிசோதனையும் செய்ய சிங்கப்பூர் அரசு முடிவெடுத்துள்ளது.
இந்த இயந்திரத்தில் உள்ள சிறு ஊது
குழாயில் ஊதினால் போதும், 60 நொடி
களுக்குள் கரோனா தொற்று உள்ளதா
இல்லையா என்பது தெரிந்துவிடும்.
கடந்த ஆண்டு இந்தக் கருவியின் மூலம் மேற்கொள்ளப்பட்ட சோதனை ஓட்டப்
பரிசோதனையில் 90 சதவீதத்துக்கும் அதிகமாக துல்லியமான முடிவுகளை இந்தக் கருவி தந்துள்ளது.
ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஊதுகுழாய் அளிக்கப்படுவதால் தொற்று பரவுவதும் தடுக்கப்படும் என்று பிரித்தானிக்ஸ் தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி: சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு அண்ணாமலை கண்டனம்

சென்னையை சுற்றியிருக்கும் முக்கிய கோயில்கள்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


