திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இலக்கியச் சேவை!

தமிழ் இலக்கிய உலகில் மாற்றுத்திறன் என்பது ஒரு தடை அல்ல; ஆக்கபூர்வமான உந்துசக்தி' என்பதை நிரூபிக்கும் வகையில், வேலூர் மாவட்டத்துக்கு உள்பட்ட பள்ளிகொண்டா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் பார்வை மாற்றுத்திறன் கொண்ட தமிழ் ஆசிரியர் பா.வெற்றிக்குமரனின் இலக்கியச் சேவை நீடித்து வருகிறது.

News image
Updated On :21 டிசம்பர் 2025, 12:06 am IST

'தமிழ் இலக்கிய உலகில் மாற்றுத்திறன் என்பது ஒரு தடை அல்ல; ஆக்கபூர்வமான உந்துசக்தி' என்பதை நிரூபிக்கும் வகையில், வேலூர் மாவட்டத்துக்கு உள்பட்ட பள்ளிகொண்டா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் பார்வை மாற்றுத்திறன் கொண்ட தமிழ் ஆசிரியர் பா.வெற்றிக்குமரனின் இலக்கியச் சேவை நீடித்து வருகிறது.

'அன்பு நதி' எனும் யூடியூப் சேனல் மூலம் விழிப்புணர்வுப் பாடல்கள், பதிவுகளையும் வெளியிட்டு வரும் இவர், தேசத் தலைவர்கள், தமிழறிஞர்களின் வேடமிட்டு மாணவர்களுக்கு வகுப்புகளை எடுக்கும் புதுமையான அணுகுமுறையின் மூலமாகவும் கவனம் ஈர்த்து வருகிறார்.

அவரிடம் பேசியபோது:

'2004 -இல் 'அன்பு நதி', 2018 - இல் 'விடியல் வெளிச்சம்', 2019 -இல் 'குரங்கும் குருவியும்', 2022 -இல் 'வசந்தம் வரும் வாடாதே', 2023 -இல் 'பாடி விளையாடு பாப்பா', 2024 -இல் 'அதிசய மாமரம்', 2025 -இல் 'தீக்குச்சி' (ஹைக்கூ கவிதைத் தொகுப்பு) ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டுள்ளேன். பிரபல இதழ்களில் எனது படைப்புகள் வெளிவந்துள்ளன. கவியரங்கம், பேச்சரங்கம், பட்டிமன்றம் போன்ற பல இலக்கிய மேடைகளில் எனது பங்களிப்பு தொடர்கிறது.

என்னுடைய இலக்கியப் பங்களிப்பு, கல்விப் பணிகளுக்காக, இதுவரை 20-க்கும் மேற்பட்ட விருதுகளையும், 25-க்கும் மேற்பட்ட பாராட்டுச் சான்றிதழ்கள், பரிசுகளையும் பெற்றுள்ளேன். 2024- ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதையும் பெற்றுள்ளேன்.

Story image

பாரதியாரின் பிறந்தநாளையொட்டி, நான் எழுதிய 'தீக்குச்சி' கவிதைத் தொகுப்பு நூலை வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பிரேமலதா, மாவட்டக் கல்வி அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் வெளியிட்டனர். 200 ஹைக்கூ கவிதைகள் இடம்பெற்றுள்ள இந்த நூலுக்கு எழுத்தாளர் அழகிய பெரியவன் வாழ்த்துரை எழுதியுள்ளார்.

பார்வையின்மை ஒரு பொருட்டல்ல. மாற்றுத்திறனாளிகள் அசாத்திய உழைப்பாலும், தங்களது பணிகளாலும் வாழ்க்கையில் சாதிக்கலாம்' என்கிறார் வெற்றிக்குமரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.