வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

தானம் வாழ்க்கை நம்பிக்கை

சமூக ஊடகங்களில்  ஆயி என்ற பூரணம்   என்ற பெண் குறித்த செய்திகள் அண்மையில் வைரலானது.

News image
Updated On :20 ஜனவரி 2024, 2:55 pm

சமூக ஊடகங்களில் ஆயி என்ற பூரணம் என்ற பெண் குறித்த செய்திகள் அண்மையில் வைரலானது. காரணம் அவர் அனைவரும் ஆச்சரியப்படும்படியாகரூ. 4 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசுப் பள்ளி கட்டடம் கட்டிக் கொள்ள தானமாக வழங்கியதுதான்.

மதுரையை அடுத்த மேலூர் அருகேயுள்ள கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளியில் 142 மாணவ, மாணவியர்கள் படிக்கின்றனர். இங்கு ஒன்பது ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இந்தப் பள்ளியைத் தரம் உயர்த்த தேவையான நிலத்தை விலை கொடுத்து வாங்க கால அவகாசம் தேவைப்பட்டதால், தரம் உயர்த்தும் பணி தாமதாகிக் கொண்டே சென்றது.

இதற்காக, தனது 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை வழங்கி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் பூரணம்.

கல்வியையும் கற்பித்தலையும் உயர்ந்த அறமாகப் மதிக்கும் தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக விளங்கும் பூரணத்தின் கொடையுள்ளத்தைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையில், குடியரசு தின விழாவில் முதல்வரின் சிறப்பு விருது வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசும் அறிவித்துள்ளது.

அவரிடம் பேசியபோது:

'என் அப்பா தனது சொத்தில் எனது பங்காக எனக்கு வழங்கியது இந்த நிலம். எனது கணவர் உக்கிரபாண்டியன் கனரா வங்கியில் வேலை பார்த்து வந்தார். எங்கள் மகள் ஜனனிக்கு ஒன்றரை வயது இருக்கும்போது, கணவர் விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார். இது நடந்து 31 ஆண்டுகள் ஆகின்றன.

எனது கணவர் இறந்தபோது வாழ்க்கை வெறுத்துப் போனாலும், மகளுக்காக வாழத் தீர்மானித்தேன். மகள் ஜனனியை பி.காம் வரை படிக்க வைத்தேன். இரண்டு ஆண்டுக்கு முன்பு ஜனனிக்கு திருமணம் செய்து வைத்தேன். குடும்பப் பிரச்னை காரணமாக, மகள் அகால மரணம் அடைந்தார்.

'தான் இறக்கும் முன்பு சொத்துகளை தர்ம காரியங்களுக்கு செலவு செய்யுங்கள்' என்று ஜனனி என்னைக் கேட்டுக் கொண்டார். இதன்படி, தர்மங்களைச் செய்து வருகிறேன்.

1998-இல் எனது சகோதரருக்காக ஒரு சிறுநீரகத்தைத் தானம் செய்திருக்கிறேன்.

கொடிக்குளம் அரசுப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த நிலம் தேவைப்படுகிறது என்பதைக் கேள்விப்பட்டேன். சில்லறையாக தானம் செய்வதைவிட கல்வி தொடர்பான அறப்பணிக்கு அப்பா அளித்த 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை தானம் செய்யலாம் என்று முடிவு செய்தேன்.

பள்ளி தலைமை ஆசிரியரிடம் எனது முடிவைச் சொல்ல, அவரும் கல்வித் துறை அதிகாரிகளிடம் தெரிவித்து இசைவு பெற்றார். அந்த நிலத்தின் மதிப்பு ரூ.4 கோடி என்கிறார்கள்.

இந்த இடத்தை மகள் 'ஜனனி' நினைவாக அரசுக்கு ஜன. 5-இல் தானமாகப் பத்திர பதிவு செய்து, மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைத்தேன்.

இந்தத் தானத்தின் மூலம் எனது மகள் உயிருடன் வாழ்வதாக நினைக்கிறேன்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.