மஞ்சள், தேவதாரு, சரளதாரு, யானைத் திப்பிலி, சிறுவழுதுணை, வெண்வழுதுணை வேர், ஓரிலை வேர். சதகுப்பை ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் சூரண மருந்து குழந்தைகளுக்குப் பல உபாதைகளைக் குணப்படுத்தி ஆரோக்கியத்தை மேம்படுத்தித் தருகிறது. உண்ணும் உணவு செரியாமல் வெளியேறும் கிராணி எனும் உபாதை, பசிமந்தம், வயிறு உப்புசம், பேதி, காய்ச்சல், மூச்சிரைப்பு, இருமல், காமலை, சோகை, நிறக்குறைவு, மேலும் பல குழந்தை உபாதைகளில் இந்த சூரண மருந்தை தேனுடன் மட்டுமோ, தேன் மற்றும் நெய் கலந்தோ, நெய்யுடன் மட்டுமோ கலந்துகொடுத்து பல உபாதைகளைக் குணப்படுத்தும். ஆயுர்வேத மருந்துவர்களின்ஆலோசனைப்படி இம் மருந்தைப் பயன்படுத்தி, குழந்தைகளின் நோய்களை குணமாக்கலாம். மருந்துடன் சேர்க்கப்படும் திரவப்பொருட்கள், அம்மருந்தின் செயல்பாட்டை உடலில் துரிதப்படுத்தி, செயல்திறனைக் கூட்டுவதால், மருந்தினுடைய பெருமையும், திரவப்பொருட்களின் தனியான செயல்குறைபாடுகளும் சேர்க்கையின் மூலம் சிறப்படைந்து நோய்களைக் குணப்படுத்துவதால், உங்களுடைய கேள்விக்கு இதையே பதிலாகக் கொள்ளலாம்.