லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சத்தியம்... இது சத்தியம்

வருடப் பிறப்பன்று கைராசிக்காக எம்.ஜி.ஆரிடமிருந்து பணம் வாங்குவதை வழக்கமாகவும் வாடிக்கையாகவும் கொண்டிருந்த நடிகர், தயாரிப்பாளர், நண்பர் கே.பாலாஜி தவறாமல் அவரிடம் வருவார்.

News image
Updated On :5 மார்ச் 2016, 9:52 am

வருடப் பிறப்பன்று கைராசிக்காக எம்.ஜி.ஆரிடமிருந்து பணம் வாங்குவதை வழக்கமாகவும் வாடிக்கையாகவும் கொண்டிருந்த நடிகர், தயாரிப்பாளர், நண்பர் கே.பாலாஜி தவறாமல் அவரிடம் வருவார்.

எம்.ஜி.ஆர் அவருக்கு நூறு ரூபாய் பணம் கொடுத்துவிட்டு, வேடிக்கையாக இப்படிக் கூறுவதை பல முறை நான் கேட்டிருக்கிறேன். ""படம் எடுக்கிறதென்னமோ தம்பியை வச்சி, பணம் வாங்குகிறது மட்டும் அண்ணன்கிட்டேயா? வாழ்க!''

பணத்தைப் பெற்றுக்கொண்ட பாலாஜி சிரித்துக்கொண்டே நழுவி விடுவார். "உங்களையும் வைத்து ஒரு படம் எடுப்பேன்' என்று தப்பித் தவறிக்கூட ஒரு வார்த்தை சொல்லிவிட மாட்டார். ஏனென்றால் ""எம்.ஜி.ஆரை வைத்துப் படம் எடுக்க மாட்டேன்'' என்று பாலாஜி சிவாஜியிடமும் "சிவாஜியை வைத்துப் படம் பண்ண மாட்டேன்'' என்று தேவரண்ணன் எம்.ஜி.ஆரிடமும் ஏற்கெனவே சத்தியம் செய்து கொடுத்திருக்கிறார்கள்.

சிவாஜியை வைத்துத் தொடர்ந்து ப - பா வெற்றிப்படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் ஏ.பீம்சிங்கும் - "எம்.ஜி.ஆரை வைத்துப் படம் பண்ண மாட்டேன்' என்று சிவாஜியின் கையிலடித்துச் சத்தியம் பண்ணியவர் ஆவார்!

(ஆரூர்தாஸ் எழுதிய "எம்.ஜி.ஆர் - சிவாஜி என் இரு கண்கள்' என்னும் நூலிலிருந்து)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.