லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அண்ணன் அறிவுரை!

பெரும் செல்வந்தரான ஜம்னாலால் பஜாஜின் மகன், படிப்புக்காக மேல் நாட்டுக்குச் சென்றபோது, காந்திஜி அவருக்குக் கடிதம் எழுதினார்.

Updated On :20 பிப்ரவரி 2016, 3:36 pm

பெரும் செல்வந்தரான ஜம்னாலால் பஜாஜின் மகன், படிப்புக்காக மேல் நாட்டுக்குச் சென்றபோது, காந்திஜி அவருக்குக் கடிதம் எழுதினார். அதில் அவர் அறிவுரையாகக் குறிப்பிட்டவை...

1. மிதமாகப் பேசு.

2. யார் எது சொன்னாலும் கேட்டுக்கொள். ஆனால், உனக்குச் சரியென்று தோன்றுவதைச் செய்.

3. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம். குறித்த நேரத்தில் குறித்த வேலையைச் செய்.

4. பணக்காரன் என்று பெருமை கொள்ளாதே.

5. செய்யும் செலவுக்குக் கணக்கு எழுது.

6. நாள்தோறும் தவறாமல் நாட்குறிப்பு எழுது. "காந்திஜி சில நினைவுகள்' நூலிலிருந்து. த.சீ.பாலு.

  • பைபிளில் "மேலும்' என்பதற்காகக் குறிக்கப்படும் அய்க் என்ற வார்த்தை மொத்தம் 46277 இடங்களில் வருகின்றதாம்.

  • ஒரே கிறிஸ்துவ ஆலயத்தின் கத்தோலிக்கர்களும், சிறிது நேரத்திற்குப் பின்னர் பிராட்டஸ்ட்டண்டுகளும் இறைவனை வழிபடுவது சுவிட்சர்லாந்து நாட்டில்தான் உண்டு. வேறு எந்த நாட்டிலும் இப்பழக்கத்தைக் காணமுடியாது.

  • வெறும் பச்சை நிறத்துணியை தேசீயக் கொடியாக கொண்ட நாடு லிபியா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.