களைப்பு நீக்கும் மருந்துகளில் கெடுதி விளைவிக்காதது - நல்லதை நிலைத்திருக்கும்படி தருவது சியவனப்ராசம், தசமூலாரிஷ்டம், அஸ்வகந்தாரிஷ்டம் முதலியவை. பசியைத் தூண்டி உணவைச் செரிக்கச் செய்வதும், உடல் தேய்வை ஈடுசெய்யுமாறு சத்து ஊட்டம் பெற வசதி செய்து தருவது - வில்வாதிலேகியம், ஜீரகவில்வாதி லேகியம், மகாபில்வாதி லேகியம் முதலியன. மன நிம்மதியும் வலிவும் அளிப்பவை - இறைவனின் சிந்தனையும், பிறர் நல்வாழ்வு பெறச் சிந்திப்பதும், அவற்றுக்கான பணிகளில் ஈடுபடுவதும் தசைகளின் இறுக்கத்தைத் தளர்த்தி மன இறுக்கத்தைப் போக்கவல்லவை - அருவிகளில் குளிப்பது, எவ்வகைச் சிந்தனையுமின்றி காலாற நடப்பது, வாரமிருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, நல்லெண்ணத்துடன் பழகும் பெரியோர்கள் நண்பர்களுடன் நற்பணிகளில் ஈடுபடுவது போன்றவை.