செரிமானம் சரியாக இல்லாத நிலையில் தேன், வெல்லப்பாகு, மீன், முள்ளங்கி, மணத்தக்காளி போன்றவற்றை அதிக அளவில் சாப்பிடுவது, மீனுடன் பால் சேர்த்துச் சாப்பிடுவது, கொள்ளுடன் தயிர், உளுந்து போன்றவற்றைச் சேர்ப்பது இவற்றை உணவாக ஏற்ற பிறகு உடலுறவு, உடற் பயிற்சி, வெயிலில் சுற்றித் திரிதல் போன்றவற்றைச் செய்வது, மனதளவில் பயம், சோர்வு, துக்கம் போன்றவற்றால் பாதித்த நிலையில் குளிர்ந்த நீரில் குளிப்பது, சீரணமாகாத உணவு வயிற்றிலுள்ள நிலையில், உடலில் எரிச்சலைக் கூட்டும் புளியோதரை, புளித்த ஊறுகாய், தயிர்சாதம் போன்றவற்றைச் சாப்பிடுவது, குமட்டிக் கொண்டு வரும் வாந்தியை வலுக்கட்டாயமாக அடக்குவது, உடலில் வறட்சியைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கில் அதிகமான அளவில் எண்ணெய்ப் பசைப் பொருட்களை உள்ளும் புறமும் உபயோகிப்பது போன்ற சில காரணங்களால் வாத, பித்த, கப தோஷங்கள் சீற்றமுற்று முன் குறிப்பிட்ட தோல், மாம்ஸம் போன்ற பகுதிகளைக் கெடுத்துத் தோல் உபாதைகளை உண்டாக்குகின்றன.