ஸமான வாயுவின் தூண்டுதலின் மூலம் கொழுந்துவிட்டு எரியும் உங்களுடைய பசித் தீயில் வந்துவிழும் உணவுப் பொருட்கள் அனைத்தும் விரைவாகச் செரிக்கின்றன. ஆனாலும் உடல் ஊட்டமடையவில்லை. உணவின் சத்து உடல் உட்புறப் பகுதிகளில் சேராமல், பெருமலமாகவும், சிறுநீர் வழியாகவும், வியர்வையின் வழியாகவும் வெளியேறத் தொடங்கினால், உடல் ஊட்டம் பெறாமல், மெலிந்தேயிருக்கும். கிணற்றைத் தூர் வாரிவிட்டால், கிணற்றிலுள்ள உறைகளின் இடுக்கிலிருந்து புதிய நீர் ஊறி, புதிய தண்ணீர் நிரம்புவதைப் போல, கெட்டுப் போயுள்ள குடலின் பித்த நீரையும், காற்றையும் நீங்கள் வெளியேற்ற வேண்டும். அதற்கு ஆயுர்வேத லேகிய மருந்தாகிய கல்யாணகுலம் உதவக் கூடும்.