ஆனால் இந்தப் பாசக பித்தம் தவறான உணவுப் பொருட்களின் சேர்க்கையால் கெட்டுப் போய்விட்டால், அது மற்ற தாதுக்களில் அடங்கியுள்ள நெருப்பின் ஊட்டத்தைக் குறைத்து அவை மந்தமாகும் தறுவாயில், நீங்கள் குறிப்பிடும் உபாதைகள் அனைத்தும் தலைதூக்கும். எளிதில் செரிக்காத உணவு, வறட்சி, உலர்ந்த தன்மை, குளிர்ச்சியானவை, மலக்கட்டு உண்டாக்குகிற எரிச்சல் ஏற்படுத்துகிற, அசுத்தமான பொருந்தாத உணவினாலும் அதிக அளவு நீர் பருகுவதாலும், நேரங்கெட்ட நேரத்தில் புசிப்பதாலும், சரியான நேரத்தில் உணவை உட்கொண்டாலும், ஆசை, கோபம், பேராசை, பொறாமை, வெட்கம், வருத்தம், உணர்ச்சி, எழுச்சி, பயம், கடும்பசி இவற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் உட்கொண்ட உணவானது, பாசகபித்தத்தைக் கெடுத்துவிடும்.