டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

பாடுவது சிரமம்!

சக்தி சிதம்பரம் இயக்கி வரும் "குரு சிஷ்யன்' படத்தில் சுந்தர்.சி, ஒரு பாடல் பாடியுள்ளார். இரண்டு நண்பர்களுக்குள் ஒரு பிரச்னையில் மோதல் ஏற்படுகிறது. இதனால் பிரியும் அவர்கள் மீண்டும் அதே பிரச்னை மூலம் ஒன

News image
Updated On :27 டிசம்பர் 2023, 2:55 pm

மனோஜ் கிருஷ்ணா

சக்தி சிதம்பரம் இயக்கி வரும் "குரு சிஷ்யன்' படத்தில் சுந்தர்.சி, ஒரு பாடல் பாடியுள்ளார். இரண்டு நண்பர்களுக்குள் ஒரு பிரச்னையில் மோதல் ஏற்படுகிறது. இதனால் பிரியும் அவர்கள் மீண்டும் அதே பிரச்னை மூலம் ஒன்று சேருவதுதான் கதை. தினா இசையில் "சுப்பையா சுப்பையா நீ செய்யிறது தப்புய்யா...' என்ற பாடலைப் பாடியுள்ள சுந்தர்.சி யிடம் சொந்தக் குரலில் பாடிய அனுபவம் குறித்து கேட்டபோது...

""பாடுவது மிகவும் சுலபம் எனவும் ரெக்கார்டிங் தியேட்டருக்குள் செல்லும் பாடகர்கள் அரை மணி நேரத்தில் பாடி முடித்துவிட்டு பணம் வாங்கிச் சென்றுவிடுகிறார்கள் என்றும்தான் நினைத்துக் கொண் டி ருந்தேன். ஆனால் இந்தப் பாடலை பல "டேக்' வாங்கி பாடியபோதுதான் அதில் உள்ள சிரமம் புரிந்தது. இந்தப் பாடல் சிறப்பாக வந்துள்ளது. அதோடு "கடலோரக் கவிதைகள்' படத்தில் இடம்பெற்ற "அடி ஆத்தாடி...' பாடலை தினா வித்தியாசமாக ரீமிக்ஸ் செய்துள்ளார். இந்தப் பாடலும் ரசிகர்களைக் கவரும்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.