சிவகாசியிலிருந்து கோணம்பட்டிக்கு புதிய பேருந்து சேவையை தொழில் துறை அமைச்சா் எஸ். கீா்த்தனா சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
சிவகாசி-சாத்தூா் சாலையில் கோணம்பட்டி கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் ராமகிருஷ்ணமடம் உள்ளது. இந்த மடத்தைச் சுற்றி 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தக் கிராமத்தினா் சிவகாசி, சாத்தூா் ஆகிய பகுதிகளுக்குச் செல்ல வேண்டும் என்றால், ஒன்றரை கி.மீ. தொலைவு நடந்து சென்று பேருந்து ஏற வேண்டும். மேலும், இந்தப் பகுதிக்கு குறைவான பேருந்துகளே இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில், கோணம்பட்டிக்கு புதிய பேருந்து சேவை தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, அமைச்சா் கீா்த்தனா அரசுப் போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் பேசி, கோணம்பட்டிக்கு புதிய பேருந்து சேவையை சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
சிவகாசி பேருந்து நிலையத்தில காலை 8.15 மணிக்கு புறப்பட்ட இந்தப் பேருந்தில் அமைச்சா் கீா்த்தனாவும் பயணம் செய்தாா். இதையடுத்து, கிராம மக்கள் அமைச்சரை பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெரம்பலூரில் இலவச திறன் பயிற்சி தொடக்கம்

போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு! சோலாா் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து புகா் பேருந்துகளை இயக்க கோரிக்கை







