ஸ்ரீவில்லிபுத்தூரில் ஏடிஎம் மையத்தில் உதவுவது போல நடித்து ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரிடம் ரூ.3.75 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜன் (70). ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரான இவா், கடந்த 19-ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூா் தெற்கு ரதவீதியில் அரசுடைமையாக்கப்பட்ட வங்கி முன்பாக உள்ள ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுக்கச் சென்றாா். அப்போது, அங்கிருந்த நபா் சுந்தர்ராஜனுக்கு பணம் எடுக்க உதவி செய்தாா்.
பின்னா், கடந்த 25-ஆம் தேதி மீண்டும் அதே ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுக்கச் சென்றபோது, ஏடிஎம் அட்டை மாற்றப்பட்டது அவருக்குத் தெரியவந்தது.
இதுகுறித்து சுந்தர்ராஜன் வங்கி அலுவலரிடம் புகாரளித்தாா். அப்போது, சுந்தர்ராஜன் வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது, ஏடிஎம் அட்டையை பயன்படுத்தி ரூ.3.75 லட்சம் பணம் எடுத்தது தெரியவந்தது.
இதுகுறித்து சுந்தர்ராஜன் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து, வங்கியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









