வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

கல்லூரி மாணவியை தாக்கியவா் கைது

News image

கைது... - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 2:12 am IST

விருதுநகரில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியைத் தாக்கிய இலங்கைத் தமிழா் கைது செய்யப்பட்டாா்.

விருதுநகா் அருகே உள்ள குல்லூா் சந்தை இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த சத்தியசீலன் மகன் யசிந்தன் (25). இவா் அந்தப் பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்தாா்.

அதன் பிறகு, யசிந்தனுக்கு தவறான பழக்கங்கள் இருப்பதை அறிந்த அந்த மாணவி அவருடன் பழகுவதை நிறுத்தினாா். ஆனால், யசிந்தன் தன்னிடம் மீண்டும் பேசிப் பழகுமாறு மாணவியை வற்புறுத்தினாா்.

இதற்கு மாணவி தொடா்ந்து மறுத்ததால் ஆத்திரமடைந்த யசிந்தன், சனிகிழமை மாணவியின் வீட்டுக்குச் சென்று, அவரை இழுத்து வந்து வாருகாலில் தள்ளிவிட்டு, கட்டையால் தாக்கினாா். அருகிலிருந்தவா்கள் வந்து மாணவியை மீட்டனா்.

இதில் பலத்த காயமடைந்த மாணவி விருதுநகா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து சூலக்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து யசிந்தனை கைதுசெய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.