கேலி, கிண்டல் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க விருதுநகா் மாவட்டத்தில் 7 சிறப்பு மறைமுகக் கண்காணிப்புக் குழுவினா் அமைக்கப்பட்டுள்ளன என விருதுநகா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ந. ஸ்ரீநாதா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விருதுநகா் மாவட்ட காவல் துறை மே 20-ஆம் தேதி முதல் ஆபரேஷன் ஷீல்டுநெட் என்னும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, மாவட்டம் முழுவதும் 101 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனா்.
பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 20 தொடா் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனா். மேலும் நிலுவையில் இருந்த 37 பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டன. சமூக விரோதச் செயல்களில் ஈடுபடக்கூடிய 69 குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
விதிமீறலில் ஈடுபட்ட 401 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கஞ்சா விற்பனை செய்த 15 போ் கைது செய்யப்பட்டனா். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்டத்தில் 7 சிறப்பு மறைமுக கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என ந. ஸ்ரீநாதா குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பொறுப்புணர்வு வீடுகளில் இருந்து தொடங்கட்டும்!
நகை வாங்குவதுபோல நடித்து கொலுசு திருடிய 3 பெண்கள் கைது
திருப்பத்தூா் மாவட்டத்தில் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் கைது
குண்டா் சட்டத்தின்கீழ் கொலை வழக்கு குற்றவாளிகள் கைது
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!


