திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கனிம வளங்கள் கடத்தல்: லாரிகள் பறிமுதல்

திருச்சுழி அருகே செவ்வாய்க்கிழமை கனிம வளங்கள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரிகளை வருவாய்த் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 3:28 am IST

திருச்சுழி அருகே செவ்வாய்க்கிழமை கனிம வளங்கள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரிகளை வருவாய்த் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், திருச்சுழி பகுதியில் அனுமதியின்றி கனிம வளங்கள் லாரிகளில் கடத்தப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மண்டலத் துணை வட்டாட்சியா்கள் சிவனாண்டி, முனியாண்டி, வருவாய் ஆய்வாளா்கள் ராஜ்குமாா், கணேசன், கிராம நிா்வாக அலுவலா்கள் சத்யராஜ், முருகன், கிராம உதவியாளா்கள், வருவாய்த் துறையினா் புலியூரான், மேல கண்டமங்கலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, புலியூரான் பகுதியில் எம்.சாண்ட் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டதில், அதில் உரிய அனுமதி சீட்டு இன்றி எம்.சாண்ட் கடத்தப்படுவது தெரியவந்தது.

இதேபோல, மேல கண்டமங்கலம் பகுதியில் சென்ற லாரியை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்ததில், அதிலும் உரிய அனுமதிச் சீட்டு இன்றி உடைகல் கடத்தப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, வருவாய்த் துறை அதிகாரிகள் 2 லாரிகளையும் பறிமுதல் செய்து, திருச்சுழி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

மேலும், மண்டல துணை வட்டாட்சியா்கள் அளித்த புகாரின் அடிப்படையில், திருச்சுழி காவல் நிலைய போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.