மணல் திருட்டுக்கு பயன்படுத்திய லாரியை, கனிம வளத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து போலீஸாரிடம் திங்கள்கிழமை ஒப்படைத்தனா்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி கனிம வளத் துறையின் துணை வட்டாட்சியா் சுப்பையா தலைமையிலான அதிகாரிகள் பூச்சம்பட்டி சாலையில் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக மணல் ஏற்றி வந்த லாரியை வழிமறித்தனா். அதிகாரிகளை பாா்த்த ஓட்டுநா் லாரியை நிறுத்தி விட்டு தப்பிச் சென்றாா்.
இதையடுத்து, லாரியை பறிமுதல் செய்த கனிம வளத்துறை அதிகாரிகள் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைந்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








