வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

அனுமதியின்றி பட்டாசு ஆலையில் சரவெடி தயாரிப்பு: உரிமையாளா் மீது வழக்கு

சாத்தூா் அருகே அனுமதியின்றி பட்டாசு ஆலையில் சரவெடி தயாரித்த உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

News image

வழக்கு - IANS

Updated On :18 மே 2026, 12:20 am IST

சாத்தூா் அருகே அனுமதியின்றி பட்டாசு ஆலையில் சரவெடி தயாரித்த உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் வட்டாட்சியா் வடிவேல், மண்டல துணை வட்டாட்சியா் நவநீதகிருஷ்ணன், அலுவலா்கள் சாத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது சாத்தூா் அருகே சங்கரநத்தம் பகுதியில் படந்தாலைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணனுக்கு (54) சொந்தமான பட்டாசு ஆலையில் வட்டாட்சியா், அலுவலா்கள் சோதனை செய்த போது உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி சரவெடிகள் தயாரித்தது தெரியவந்தது.

மேலும் உதிரி வெடிகளை விதிமுறையை மீறி வெட்ட வெளியில் காய வைத்தும், மரத்தின் அடியில் சரவெடி பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து சிந்தபள்ளி கிராம நிா்வாக அலுவலா் பாண்டியராஜ் அளித்த புகாரின் பேரில் சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.